உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய அம்மாபட்டி, சின்னாளபட்டி மாணவர்கள் சின்னாளபட்டி, மார்ச் 9- உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந் திய மாணவர்கள் அரசு களின் முயற்சியால் நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த சிரில் போஸ்கோ என்ற மாணவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், போர் தொடங்கியதில் இருந்து உணவு, தண்ணீர் கூட இல்லா மல் அல்லல் பட்டுக் கொண்டிருந்தேன். தொடர்ந்து தமி ழக அரசிடம் தொலைபேசி மூலம் பேசியதில் இருந்து ஒன்றிய அரசும் மாநில அரசும் தலையிட்டு நாடு திரும்ப உதவியது. என்னைக் காப்பாற்றி உதவி செய்த தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நானும் என் குடும்பத்தாரும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் நாட்டில் ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரியில் நான் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரி டம் வேண்டுகோள் வைக்கிறேன். சின்னாளபட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த அண்ணா மலை கூறுகையில், படிப்பை உள்நாட்டிலேயே தொடர்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளோம் என்றார். ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆர்.எம்.காலனி சாலைப்பணி துவக்கம் திண்டுக்கல், மார்ச் 9- திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சாலையை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி துவக்கப் பட்டது. திருச்சி ரோடு பாலம் ரவுண்டானா அருகிலிருந்து எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி வரையிலான ஆர்.எம். காலனி சாலையை மேம்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி யின் சார்பாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து வெக்கா ளியம்மன் கோவில் அருகில் பணி துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், 3 ஆவது வார்டு திமுக உறுப்பினர் இந்தி ராணி, 4 ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜ்மோகன், 6 ஆவது வார்டு திமுக உறுப்பினர் சரண்யா மற்றும் மாநக ராட்சி பொறியாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.