சென்னை, ஜூலை 19- ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளி யில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழை வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ்களின் பின்புறத்தில் கட்டண பாக்கியை குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் கட்டண பாக்கியை குறிப்பிடும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். ‘கட்டண பாக்கி உள்ளது’ என சான்றி தழ் குறிப்பிட்டு மாணவர்களை மனரீதி யாக பாதிப்படைய செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.