tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

உயர்நீதிமன்றம் உத்தரவு...

து” என்று தெரிவித்தார். மேலும், “மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கல வரத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக இரண்டு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரு பிரிவினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை உண்டாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளை வித்ததாக அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த சம்ப வத்தில் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான பிரச்சனை குறித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத்தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது மீண்டும் பிற மதத்தினரை தூண்டி பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.

மத ரீதியிலான பதற்றங்களைத் தணிக்க காவல்துறை யினர் நடவடிக்கை எடுத்து, பொது ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை இந்து, முஸ்லிம் மற்றும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் அமைதியாக வசித்து வருகின்றனர். ஒற்றுமையில் வேற்று மைதான் நம் நாட்டின் பலம். எனவே, அனைத்து மதத்தினர் மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட யாரையும் அனுமதிக்கக்கூடாது. சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது. கோயிலுக்குச் சென்று வழிபட எந்தவொரு தடையும் இல்லை.” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.