tamilnadu

img

மல்லிகை விவசாயத்திற்கு அனுமதி...திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.கோரிக்கை

மதுரை
கொரானோ முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணிகளுக்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பா.சரவணன் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை மதுரை  ஆட்சியரிடம் வழங்கினார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம், பாரபத்தி, நல்லூர், சோளங்குருணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது தனது சொந்த வாகனத்தில் இலவச குடிநீர் வழங்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும்  மல்லிகை பூ விவசாயம் செய்து வருபவர்கள் கொரானோ ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மல்லிகை பூ விவசாயத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு  நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார். மேலும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், செவந்திகுளம் கண்மாய் பகுதிகளில் 200 ஏக்கர் அளவில் நடவு செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்ய ஏற்பாடு செய்ததற்கு ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.