சென்னை,ஜூலை 21- தமிழக ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதியை ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள் ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலங் களவையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 23 ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 22 திங்கட்கிழமை யன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. மறுநாள் செவ்வாய்க் க்கிழமை (ஜூலை 23) நடப்பு நிதி யாண்டுக்கான (2024-2025) ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது வருமாறு: பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வுள்ள பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி விடு விக்கப்பட வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப் பட்ட மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பத்தாண்டு களாக வருமான வரிச் சுமை குறைக்கப் படும் என்ற நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப் பாக உள்ளதை நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடு களுக்கு செலவு வரம்பு உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு களை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.