tamilnadu

ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக!

ஐதராபாத்,ஜன.19- அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர்  த . ரவீந்திரன், பொதுச்செயலாளர்  என்.கே.சுக்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் ஐதரா பாத்தில்  ஜனவரி 12 அன்று சுந்தரய்யா பவனில்  தலைவர் த.ரவீந்திரன் தலைமையில் நடை பெற்றது.  பொதுச் செயலாளர் என்.கே.சுக்லா,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத், அகில இந்திய இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணைத் தலைவர் மல்லாரெட்டி ஆகியோர் பேசினர்.  பத்து மாநிலங்களிலிருந்து கரும்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  உரம், டீசல் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வால் கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கரும்புக்கான விலையை உயர்த்த மறுக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் கரும்புக்கு 15 ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கரும்புக்கு மாநில அரசு விலையை  கடந்த நான்காண்டுகளாக அறிவிப்பதில்லை.

போராட்டத்திற்கு பிறகு பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் பரிந்துரை விலையை (SAP) அறிவித்துள்ளன.  மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு வருவாய் பங்கீட்டு முறையை மாநிலங்கள்  சட்டமாக்கிட வேண்டுமென்று கடிதம் எழு தியதை ஏற்று தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் சட்டமாக்கி எஸ்ஏபி-ஐ ரத்து செய்துவிட்டனர். கரும்புக்கு விலை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கிட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிறப்பத்த உத்தர வை ஒன்றிய அரசு ரத்து செய்திட வேண்டும்.  அதே போல ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலை எப்ஆர்பி(FRP)ஐ மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு தர சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கலாம் என ஒன்றிய அரசு பரிந்துரைக்கிறது. இது  கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும் செயலாகும். இந்த ஆலோசனை யை ஒன்றிய அரசு கைவிட்டு விட வேண்டும். கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 இன் படி கரும்பு பணத்தை கரும்பு கொள்முதல் செய்த 14  நாட்களில் வழங்கிட வேண்டுமென்பதை உறுதிப்படுத்திட வேண்டும். ஆனால் சர்க்கரை  ஆலைகள் சட்டத்தை மதிக்காமல் ஒரு வரு டத்திற்கு மேலாக கரும்பு பணத்தை விவசாகளுக்கு தராமல் அலைய விடுகிறார்கள். 

தற்போது நாடு முழுவதும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கரும்பு பண பாக்கி உள்ளது. இதில்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ. 5 ஆயிரம்  கோடிக்கு மேல் பாக்கி உள்ளது.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  2021-22 ஆண்டுக்கு 9.5 பிழிதிறனுக்கு ரூ.5 ஆயிரம் கரும்புக்கு விலை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.  அனைத்து மாநில அரசுகளும் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவித்து எஸ்ஏபி (SAP)  வழங்கிட வேண்டும்.  உரம், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட இடு பொருட்களின் விலையை குறைத்து கரும்பு உற்பத்தி செலவை குறைத்திட வேண்டும்.  நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியை முழுமையாக விவசாயிகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும். கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களில் விவசாயிகளுக்கு பணத்தை பெற்றுத்தருவதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  மூடியிருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்திட வேண்டும். (NCLT)க்கு தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு சென்றுவிட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை (தமிழ்நாட்டில் ஏழு ஆலைகளை உட்பட) அரசு ஏற்று நடத்திட வேண்டும். 

சர்க்கரை ஆலைகள் உபபொருட்கள் உற்பத்தியில் வரும் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு அளித்திட வேண்டும்.  கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலை களை தனியாரிடம் ஒப்படைத்திடக் கூடாது. கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகளைப் பாதுகாத்து மேம்படுத்திட ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி அளித்திட வேண்டும்.  சர்க்கரை துறையில் ரங்கராஜன் குழுவின் சிபாரிசுகளை ஒன்றிய அரசு அமல்படுத்தக் கூடாது. 

சர்க்கரை ஆலைகள் இருப்பில் உள்ள சர்க்கரையில் மாதம் பத்து சதம் மட்டுமே விற்பனை செய்து கொள்ளும் கோட்டா முறையை அமல்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதுவரை இருப்பில் உள்ள  சர்க்கரையில் மாதம் 25 சதவீதத்தை விற்றுக் கொள்ள சர்க்கரை ஆலைகளை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். கோட்டா முறையை ஒன்றிய அரசு அமல்படுத்துவதால் சர்க்கரையை வங்கிகளில் அடகு வைத்து கூடுதலாக வட்டி கூட்டு வட்டியை சர்க்கரை ஆலைகள் தேவையின்றி கட்டி வருகின்றன.  அனைத்து விளை பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிட ஒன்றிய அரசு சட்டம் இயற்றிட வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.