tamilnadu

ஜவுளித்தொழிலை, தொழிலாளர்களை பாதுகாத்திட கோரிக்கை ஜூன் 15 - நாடு முழுவதும் போராட்டம்

கோவை, மே 18–  ஜவுளித்தொழிலை பாதுகாக்க, ஜவுளித்  தொழிலாளர்களைபாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்து வது என கோவையில் நடைபெற்றசிஐடியு பஞ்சாலை, விசைத்தறி தொழிலாளர்கள் சங்க  அகில இந்திய மாநாடு தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. இம்மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து சிஐடியு அகில இந்திய தலை வர் டாக்டர் ஹேமலதாபேசுகையில், இந்திய  நாடு முழுவதும் பத்து கோடிக்கும் அதிகமா னோர் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுவருகின்ற னர். ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையின் காரணமாக தற்போது இத்தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இத்தொழில் முனை வோர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது டன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒன் றிய அரசு நூல், பஞ்சு விலை உயர்வை கட்டுப்  படுத்த வேண்டும். கட்டுபடியாகிற விலையை  அரசே நிர்ணயித்திடவேண்டும். 

மேலும், அனைத்து என்டிசி ஆலைகளை யும் உடனடியாக திறந்திட வேண்டும். பல் வேறு மாநிலங்களில் ஜவுளித் தொழிலில் பணி யாற்றுகிற தொழிலாளர்கள் பணியிடங்களில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணியாற்ற நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். தொழிலா ளர்களின் உழைப்புச் சுரண்டலை தடுத்து 8 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்  டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையில் ஊதியம் உள்ளது. இதனை முறைப்படுத்தி குறைந்தபட்சம் 26 ஆயிரம்  ரூபாய் ஊதியம் என்பதை நிர்ணயம் செய்ய  வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட  உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஓய்வு காலத்தில் ரூ.9 ஆயிரம் பென்சன்  என்பதை நிர்ணயிக்க வேண்டும். ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வீடு, சுகாதாரம், குழந்தை களின் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதேபோல், மேற்கண்ட கோரிக்கை களோடு உள்ளூர் பணியிட கோரிக்கைகளை யும் இணைத்து ஜவுளித் தொழிலை பாது காப்போம், ஜவுளித் தொழிலாளர்களை பாது காப்போம் என்கிற முழக்கத்துடன் வருகிற  ஜூன் 15 ஆம் தேதி நாடு முழுவதும் பஞ்சாலை கள், விசைத்தறிக் கூடங்கள் என அனைத்து மையங்களிலும் போராட்டங்களை நடத்து வது என மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

ஒருங்கிணைப்புக் குழு தேர்வு

மேலும், இம்மாநாட்டில்சிஐடியு அகில  இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையானை கன்வீனராக கொண்டு 28 பேர் கொண்ட  ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில் விசைத்தறி சம்மேளன பொதுச்  செயலாளர் எம்.சந்திரன் நன்றி கூறினார்.

ஆதரவு ஆர்ப்பாட்டம்

முன்னதாக, திருப்பூர், ஈரோடு மாவட்டங்க ளில் பஞ்சு விலை உயர்வை கண்டித்து நடை பெறும் தொழில் முனைவோர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து கோவை மசக்காளிபாளையம் மைதா னத்தில் அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, சிஐடியு அகில இந்திய உதவி தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன தலை வர் சி.பத்மநாபன், பொதுச் செயலாளர் எம். அசோகன், சிஐடியு மாநில நிர்வாகி கோபி குமார், சிஐடியு கோவை மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்  கேற்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதி நிதிகள் அவரவர் மொழியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.