tamilnadu

2 லட்சம் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை!

புதுதில்லி, பிப்.2- இன்றையதினம் ஏற்பட்டுள்ள பணவீக்கத்துடன் இப்போது ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை ஆராயும் போது அது சென்ற ஆண்டின் ஒதுக்கீட்டைவிடக் குறை வானதேயாகும். இந்த லட்சணத்தில் இரண்டு லட்சம் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தப் போகி றோம் என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது ஏமாற்று வேலையேயாகும் என்று அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

அங்கன்வாடி மையங்களுக்காக சென்ற ஆண்டு ஒதுக்கிய தொகை 20,105 கோடி ரூபாய். இந்த ஆண்டு 20,263.07 கோடி ரூபாய். இப்போதுள்ள பணவீக்கத்து டன் ஒப்பிடும்போது இதன் உண்மையான ரூபாய் மதிப்பு சென்ற ஆண்டைக்காட்டிலும் குறைவாகும். அங்கன்வாடி மையங்களை இயக்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்றுஅடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. இந்த லட்சணத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு லட்சம் அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். நிதி ஒதுக்கீடே இல்லாமல் இதனை எவ்வாறு செய்யப்போகிறார்கள். இது ஏமாற்று வேலையாகும்

மதிய உணவு திட்ட நிதிவெட்டு

இந்திய உணவுக் கழகத்திற்கு உணவு மானியத் திற்காக அளிக்க வேண்டிய தொகையில் 30 சதவீதம் வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது அங்கன்வாடி மையங்களையும் கடுமையாகப் பாதிக்கும். மதிய உணவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் 1267 கோடி ரூபாய் வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் 84 சதவீதக் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில் இவ்வாறு மதிய உணவுத் திட்டத்திலும் வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வருகி றோம். இந்தக் கோரிக்கைகள் குறித்து எதுவுமே குறிப் பிடவில்லை என்பது மட்டுமல்ல, இப்போது அளிக்கப் பட்டுவரும் அற்ப ஊதியத்தைக்கூட உயர்த்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. அங்கன்வாடி தொழிலாளர்களையும் உதவியா ளர்களையும் முற்றிலுமாக உதாசீனம் செய்துள்ள தற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் அனைத்து அங்கன்வாடி தொழிலாளர்களையும், உதவியாளர்களையும் அறைகூவி அழைக்கிறது. 2022 மார்ச் 28-29 தேதிக ளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத் தத்தை மகத்தானமுறையில் வெற்றி பெற வைத்திட அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு ஏ.ஆர்.சிந்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.