tamilnadu

img

டாஸ்மாக் கடைகளும்... மது போதை மறுவாழ்வு மையங்களும்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப் படியாக மூட வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தற் போதைய நிலையில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தையாவது குறைக்க வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. மற்றொருபுறத்தில் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகள், வசூல் வேட்டையை தடுக்க வேண்டுமென டாஸ்மாக் ஊழியர்களும் அரசை வற்புறுத்துகின்றனர். அதே நேரத்தில், மதுரை அரசு  இராஜாஜி மருத்துவமனையில் உள்ள  போதை ஒழிப்பு மையம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்க ளுக்கு சிகிச்சையளித்து அவர்களை மீட்பதில் முதலிடத்தில் உள்ளது; அதிக அளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர். மதுரை மருத்துவமனையில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில்  இரண்டு மனநல மருத்துவர்கள்,

இரண்டு சமூகப் பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவ உளவியலாளர்கள் உள்ளனர், இவர்கள் ஒரு மாதத்திற்கு 30 முதல் 35 புதிய உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் கிறார்கள். கடந்த நான்கு மாதங்களாக நாளொன்றுக்கு 15 முதல் 20 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிறார் இந்தத்துறையின் உதவிப் பேராசிரியர்  டி.கிருபாகர கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், 100 பேர் சிகிச்சைக்கு வந்தால் அவர்களில் இருவர்  பெண்கள். போதைக்கு அடிமையான பெண் களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வில்லை. ஆனால், போதைக்கு அடிமையாகி விட்டோம் என பல பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த எண்ணத்தை  அவர்கள் தகர்த்தெறிந்து தங்களை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார்.

மதுபோதை மறுவாழ்வு மையத்திற்கு வருப வர்களுக்கு முதலில் நச்சு நீக்க சிகிச்சைக்கு உட் படுத்தப்படுகின்றனர். பின்னர் மனநல சிகிச்சை யளிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையான வர்கள் இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், கணையம் மற்றும் சிறுநீரகத்தை பாதிப்புக் குள்ளாகிறார்கள் என்கிறார் துறையின் பேரா சிரியர் வி. கீதாஞ்சலி. மேலும் அவர் கூறுகையில், தற்போதைய ‘ஐயப்பன் சீசனையொட்டி மதுபானம் அல்லது புகைபிடிப்பதை பலர் நிறுத்தியிருப்பர்.  இத னால் அவர்களுக்கு பதற்றம் ஏற்படும். வலிப்பு நோய் கூட ஏற்படலாம். அப்போது  அதிகமா னோர் எங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக வருவார்கள் என்கிறார் மருத்துவர் கீதாஞ்சலி.  20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் தான் புகையிலை மற்றும் மதுவுக்கு அதிகளவு அடி மையாகின்றனர். சில பொருட்களை நுகர்ந்தால் அதன் வாசனைக்கு அடிமையாகும் மாணவர்க ளும் உள்ளனர். பொதுவாக மதுவுக்கு அடிமை யானவர்களே அதிகம்.

இளைஞர்கள் அதாவது 30 வயதிற்குட் பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போதைக்கு அடிமையாவதற்கான கார ணங்களில் பிரதான பங்களிப்பது குடும்பப் பிரச்சனை மற்றும் குடும்பத்தினர் மற்றும் சுற்றி இருப்பவர்களின் பழக்கவழக்கங்கள்.   தவிர ஆர்வத்தால் குடிப்பவர்கள், நண்பர்களின் வற் புறுத்தலால் குடிப்பவர்கள் என பலவேறு வகை யினர் உள்ளனர்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையா னவர்களில் பலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பண்டிகைக் காலங்களுக்குப் பின்னர் நோயாளிகளின் வருகை அதிகரிப்பது வழக்கமான ஒன்று எனக் கூறும் மருத்துவர்கள், மது போதைக்கு அடிமையான ஒருவர் உள் நோயாளியாக சேர்ந்தால்  அவர்கள் மூன்று வாரங்களில் குணமடைவார்கள். நோயாளியின் ஒத்துழைப்பு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பொறுத்தது என்கின்றனர்.

உதவிப் பேராசிரியர் தீபா கூறுகையில், நோ யாளிகளுக்கு மட்டுமல்ல; குடும்ப உறுப்பினர்க ளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.  குறிப்பாக பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், முடிவெடுக்கும் திறன்களை வலுப்படுத்துவ தற்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மறு வாழ்வு மையத்தில் குழு சிகிச்சையும் அளிக்கப் படுகிறது. இதன் மூலம் போதைப் பழக்கத்திலி ருந்து மீண்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தங்கள் போதைப் பழக்கம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அவர்களை உத்வேகப்படுத்துகிறது. மீண்டும் குடிப்பழக்கத்திற்கு செல்வதைத் தடுக்கிறது என்றார்.

மருத்துக்கல்லூரி முதன்மையர் ஏ.இரத்தின வேல் கூறுகையில், “ சமூக-சுற்றுச்சூழல் காரணி கள்,போதைக்கு அடிமையாவதில் முக்கிய பங்கு  வகிக்கிறது. சிகிச்சைக்குப்பின் போதை அடிமை யிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. இருப்பினும் இதற்கு நோ யாளிகள் அவர்களது உறவினர்கள் கூட்டுப் பங்களிப்பு அவசியம். போதைப்பொருட் களால் ஏற்படும் தீங்குகள் குறித்து அதிக விழிப்பு ணர்வு எற்படுத்தப்படவேண்டும் என்றார்.  மறுவாழ்வு மையங்களால் மீட்கப்படுவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரே. படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவது தான் சிறந்த தீர்வு. அதனொரு பகுதியாக டாஸ்மாக் கடை களின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டு மென்ற வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் சில ஆயிரம் பேரை யாவது போதை அடிமையிலிருந்து மீட்க முடியும். டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைக்க முன்வருமா தமிழக அரசு?

சௌமி