புதுச்சேரி,அக்.30- புதுச்சேரியில் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற அவலம் நிகழ்நதுள்ளது. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் கொல்கத்தாவை சேர்ந்த குடும்பத்தினர். இதில் அக்குடும் பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புதுச்சேரி ரயில்நிலை யத்தை அடைந்ததும் சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்தனர். ரயில் நிலையத்திற்கு வந்த புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்சில் ஸ்ட்ரெச் சர் சேதமடைந்து இருந்தது. அதனை நடைமேடைக்கு இழுத்துச்செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றிச்செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ‘ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேத மடைந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரி வித்தும் புதிய ஸ்ட்ரெச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்தார். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறினர்.