ஆக்கூர் உதவி மின் பொறியாளர் அராஜகம்: விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, ஜுன் 5 - மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் உதவி மின் பொறியாளரின் அடாவடி போக்கை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கூரிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஜி.ஜோதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் பி. குணசுந்தரி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.தட்சிணாமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ. ஆனந்தன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.கண்ணகி, சிஐடியு ஒன்றியச் செயலாளர் என்.சிவசுப்ரமணியன், விவ சாயத் தொழிலாளர் சங்க (பொ) ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், ஒன்றி யப் பொருளாளர் சுதாமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். புதிய மின் இணைப்பு வேண்டி வரும் ஏழை-எளிய மக்களிடம் தேவையற்ற ஆவ ணங்களை காரணம் காட்டி, மனு நிராகரிக் கப்படுகிறது. மின் பொறியாளர் அலுவ லகத்தில், உதவி மின் பொறியாளர் பொது மக்களிடம் ஆணவத்துடன் பேசுவதை கண்டித்தும், ஆன்-லைனில் புகார் செய்யப் பட்ட மனு மீது பணிமுடிந்து விட்டது என்று உயர் அதிகாரிகளுக்கு தவறாக தகவலை கொடுப்பது சரிதானா?, குடிமனைப் பட்டா இருந்தும் நீண்ட காலமாக மின் இணைப்பு கொடுக்க மறுக்கப்படுகிறது. ஆக்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி யில் ஏற்படுகிற தொடர் மின்வெட்டை கண்டு கொள்ளாமல் செயல்படுவதோடு, பொது மக்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்தும் உதவி மின்வாரிய பொறியாளரை பணி மாறுதல் செய்ய வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகளு டன் நடந்த பேச்சுவார்த்தையில், “உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.