சென்னை, மே 23- பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங் களை அடைய இலக்கு நிர்ணயம் செய் யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை சென்னை, தலைமை செயல கத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி மூலம் திங்க ளன்று(மே 23) தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 11 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சாகு படிக்குக் கொண்டு வருதல் உட்பட 3 அம்ச திட்டங்கள் செயல்படுத்த படவுள்ளன. இந்தத் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1997 கிராமங்களில் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத் தின் முக்கிய நோக்கம். அனைத்து கிரா மங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்க அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசுகையில், “இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிட்டப் பட்டுள்ளது.
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”என்றார். இதனைத் தொடர்ந்து பயனாளி களுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவ சாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக் கலை பயிர் சாகுபடி செய்ய ஊக்கத் தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடி கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மர க்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயி களுக்கு 100 விழுக்காடு மானி யத்தில் கிணறு அமைத்து மின் மோட்டா ருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்ப தற்கான பணி ஆணை, பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகிய வற்றை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.