tamilnadu

img

நைசாக நழுவிய அதிமுக - கூட்டணியினர்

18வது மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 வெள்ளியன்று உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலுமே காணப்பட்ட பொதுவான அம்சம், படுதோல்வி உறுதி என்பதால் அதிமுக தொண்டர்கள் முற்றிலும் உற்சாகம் இழந்திருந்தனர் என்பதுதான். பொதுவாக வாக்குச்சாவடியிலிருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளிநின்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களை வரவேற்பதும், அவர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதும் நடைமுறை. அநேகமாக எல்லா வாக்குச்சாவடிகளிலும் காலையில் இந்தியா கூட்டணியினர், அதிமுக கூட்டணியினர் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் உற்சாகம் முற்றாக வடிந்தது. ஏராளமான வாக்குச்சாவடிகளுக்கு அருகே மதியத்திற்குப் பிறகு அந்தத் தொண்டர்கள் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு மெதுவாக நழுவிச் சென்றுவிட்டதை பார்க்க முடிந்தது. பல இடங்களில் அதிமுக அணி தொண்டர்களுக்கு அவர்களது அணியின் சார்பில் கிடைக்கப்பெற வேண்டிய உணவுப் பொட்டலங்கள் கூட வந்து சேரவில்லை. அருகில் இருந்த திமுக அணியின் தொண்டர்களும் தோழர்களும் எஞ்சியிருந்த அதிமுக தொண்டர்களுக்கும் தாங்களே உணவுப் பொட்டலங்களை வழங்கிய காட்சிகளை காண முடிந்தது. 

;