tamilnadu

img

‘பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதே அதிமுகவின் தலையாய பணி’: அமைச்சர்

சென்னை,பிப்.6- சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத் ்தின் தலையாய பணி என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட் ்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்ட மைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் ்செல்வம், அதிமுகவிற்கும் சமூகநீதிக் ்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்” என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த விநோதமாக இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி, பின்னர் பாஜகவின் தயவில் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவி அனுபவித்த அவர், சமூகநீதி பற்றி யெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது தெரிந்ததுதான் என்றாலும் அரசியல் நாகரிகம் கருதியும் சமூகநீதியில் தமிழகத்தில் அனைவரை யும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிமுகவையும் அழைத்தார் முதல்வர். அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது  அதிமுகவின் விருப்பம்.

ஆனால் நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம், முதல மைச்சர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு கூடவராமல் போனது ‘ஊருக்கு உபதேசம்’என்ற பழமொழியை நினைவு படுத்து கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் அழுத்தத்தை தாங்க முடியாமல் எப்படி பழனிசாமியையும், முதல்வராக ஏற்றுக் கொண்டு இருந்தாரோ, அதே போல் ஒன்றிய பாஜக அரசு நீட் விதிவிலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் நிராகரித்ததை திசைதிருப்ப முதலமைச்சருக்கு ஏழு பக்கம் கடிதம் எழுதியிருக்கிறார்

என்றே தோன்று கிறது. பாஜகவின் தயவை இப்போ தும் பெறுவதற்காக முதலமைச் ்சரை விமர்சிக்கும் கட்டாயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டி ருக்கிறது. முதலமைச்சரை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள் சமூகநீதி கூட்ட மைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை; கடிதம் எழுது வதில் புதிரும் இல்லை! ஓ.பன்னீர் ்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு, தங்கள் பழவினை யால், சமூகநீதி சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.