tamilnadu

விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் மார்ச் 28ல் 1000 மையங்களில் மறியல்

சென்னை,மார்ச் 5-  ஒன்றிய பாஜக அரசின்  தொழி லாளர்கள், விவசாயிகள்,பொது மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நடைபெறும் அகில இந்திய  வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் மார்ச்-28 ஆம் தேதியன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பாலன் இல்லம்) பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்மாநில விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் (பாலன் இல்லம்)  என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: “மக்களைக் காப்போம்! தேசத்தைக் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மேற் கொள்ள அனைத்து தொழிற்சங்கங் கள் அறைகூவல் விடுத்துள்ளன.

 தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழி லாளர்கள் தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள் கிறோம்.  தேசிய ஊரக வேலை உறுதி த்திட்டத்திற்கான நிதியை ஆண்டு தோறும் குறைத்து அத்திட்டத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒன்றிய  அரசு ஈடுபட்டுள்ளது.  இந்த ஆண்டு ரூ.73000 கோடி  மட்டுமே இத்திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதிலும் கடந்த ஆண்டு வழங்க வேண்டிய கூலிபாக்கி 18000 கோடி ரூபாய் உள்ளது. மீதியுள்ள 55 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு குடும்பத்திற்கு 16 நாள் மட்டுமே இந்த ஆண்டு வேலை கிடைக்கும். ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய தொழிலாளர்கள், விவ சாயிகள், பொது மக்கள் விரோத மானப் போக்கை கண்டித்து நடை பெறும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் மார்ச்-28 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு சங்கங்களின் தலை வர்கள் மாவட்ட அளவில் கூடிப் பேசி ஒன்றிய, நகர அளவில் சாலை மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டு வெற்றிகரமாக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.