மாதர் சங்கத்தினை தோற்றுவித்த மகத்தான தலைவர், இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்திலும் விடுதலை போராட்ட களத்தில் ஆங்கிலே யருக்கு எதிராகவும் நின்ற போராட்டக்களத்தின் ராணி, போர்க்குணமிக்க புரட்சியாளர், தொழிற்சங்க தலைவர், தோழர் அகல்யா ரங்கனேகர் பிறந்த தினமான ஜூலை 8 2022 அன்று மகாராஷ்டிராவில் அவரது நூற்றண்டு விழா கொண்டாடப்பட்டது. அகல்யா ரங்கனேகர் ஜூலை 8 1922 இல் புனே மாவட்டத்தில் பிறந்தார். அகல்யாவின் தந்தை திரிம்பக் ரணதிவே, சிறந்த முற்போக்காளர். ஜோதிராவ் பூலே வின் சமூக சீர்திருத்த இயக்கத்தை தலைமையேற்று நடத்திய மகத்தான தலைவர். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை கடுமையாக எதிர்த்தவர். தொழிற்சங்க தலைவரும் கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியுமான தோழர் பி.டி.ரணதிவே. அவரு டைய செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டவர் அவருடைய சகோதரி அகல்யா. பள்ளிக் கல்விக்குப் பிறகு 1942இல் தானே மாவட்டத்தில் இருபதாவது வயதில் இளங் கலை கல்வி பயில பெருகசன் கல்லூரியில் சேர்ந்தார். ஆகஸ்ட் 1942 ஆம் ஆண்டு நாடு முழுவதும் வெள்ளை யனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. நடை பெற்ற மறுநாளே காங்கிரஸ் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரிக் காலத்தில் தோழர் அகல்யா தம்மோடு சில மாணவிகளை இணைத்துக் கொண்டு புனேவில் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டங்களையும் பேரணியை யும் நடத்தினார். அதற்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையினுள் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்தபடியே வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சேலைகளை கொண்டு தேசியக் கொடி யினை தயாரித்து அதில் கரித்துண்டிணை கொண்டு அசோக சக்கரத்தினை வரைந்து தேசிய கொடியினை தயாரித்தனர். சிறைச் சுவர்களில் பிரமிடு உருவாக்கி அதன் மேல் ஏறி தோழர் அகல்யா தேசியக் கொடியினை சிறைச்சாலையில் ஏற்றினார். அவர் செய்த குற்றத்திற்காக அவருடைய சிறைக் காலம் நீட்டிக்கப்பட்டது. அவருடைய கல்லூரி நிர்வாக மும் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்தது. ஆனால் அவர் தனது இளங்கலை கல்வியை மும்பை யில் இருக்கிற ரூயா கல்லூரியில் முடித்தார். கல்லூரி யில் சிறந்த மாணவி மட்டுமல்லாது பன்முகத் திறமை கொண்டு பாடகி நடிகை மற்றும் விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்ததோடு நிறைய விருதுகளையும் பதக்கங்களையும் வென்றார். சுதந்திர இந்தியாவின் விடுதலைக்காகவும் உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற் காகவும் 1943களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தார். அதே வருடத்தில் ”பரேல் மகிளா சங்” என்கிற அமைப்பினை பெண் ஜவுளி தொழிலாளர்களின் பிரச் சனைகளுக்காக உருவாக்கினார். அதன் மூலம் அவர் களது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். பின்பு அது “செராமிக் மகிளா சங்” என்ற அமைப்பாக மாறியது. நாளடைவில் ”ஜான்வாடி மகிளா சங்கார்த் தனா” என்று அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாக பெண்களின் அடிப்படைக் குரலாக இன்றும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
1945ஆம் ஆண்டு மாணவர் சங்கத்தின் தேசியத் துணை தலைவராக செயல்பட்ட தோழர் பாண்டுரங் பாஸ்கர் ரங்கனேகரை திருமணம் செய்து கொண்டார். தோழர் பி.பி.ஆர் மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட கால மாநில செயற்குழு உறுப்பினராகவும் மற்றும் கட்சியின் மகாராஷ்டிரா மாநில அலுவலகத்தின் செயலாளராக பணியாற்றினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர் சங்க இளைஞர் சங்க தோழர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டார். 1946 பிப்ரவரி 22 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “ராயல் இந்திய கப்பல் படை எழுச்சி” வெடித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் இரண்டு கட்சி களுமே கப்பல் படை எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்தன. கடற்படை போராட்டம் பிரிட்டிஷாரிடம் அவர் களை சரணடைய வைத்துவிடும் என எண்ணினர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த போராட்டத்தில் உறுதி யோடு செயல்பட்டது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) ஆகியவற்றின் தலைமையின் கீழ் மும்பையைச் சார்ந்த தொழிலாளர்கள் இந்திய கப்பல்படை வீரர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக் கில் வீதியில் இறங்கி போராடினர்.
போராட்டத்தின் போது மாதர் அமைப்புகளின் சார்பில் அகல்யா போராட்டக்காரர்களுக்கு உணவு அளிக்கும் முக்கியப் பணியினை மேற்கொண்டார். 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தொழி லாளர்கள் மீது ஒரு கொடூரமான அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. பங்கேற்ற தோழர்கள் ஏராளமானோர் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினார். அவரோடு மிகத் துணிச்சலான பெண் தோழர் கமல் டாண்டே துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்தார். அகல்யாவின் சகோதரி குசும் ரணதிவே யின் கால்கள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது. ஆனால் தோழர் அகல்யா ஆச்சரியப்படும் அளவில் தோட்டாவினால், துளைக்கப்பட்டு உயிர் பிழைத்து இருந்தாலும் போராட்டக்காரர்களோடு இறுதி வரை உடனிருந்து பிரிட்டிஷாரின் தோட்டக்களை எதிர்கொண்டார்.
விடுதலைக்குப் பின்பு சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்துடன் சேர்ந்து மாபெரும் வெகுஜன போராட்டத்தினை 1950 களில் அகில்யா நடத்தினார் கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சமாஜ்வாதி கட்சி, விவசாயி கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து சம்யுக்த மகாராஷ்டிரா சங்கம் என்ற பெயரில் மும்பை மாநிலத்தை மொழிவாரி மாநிலமாக அமைக்கக்கோரி மாபெரும் வர்க்க, வெகுஜன போராட்டத்தினை நடத்தினர். அந்த வீர தீரமிக்க போர்க்கள வரலாற்றுப் போராட்டத்தில் ஈடுபட்ட 106 தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை காங்கிரஸ் அரசு படுகொலை செய்தது. தோழர் அகில்யா பெரும் எண்ணிக்கையிலான பெண்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு லத்தி தாக்குதலுக்குள்ளானார். புகழ்பெற்ற மராத்தி பத்திரி கையாளர், எழுத்தாளர் மற்றும் போராட்டத்தின் தலைவர் பிரகலாத் கேசவ் ஆத்ரே அவருடைய கவிதை களில் அகல்யாவை ”ராணா ராகினி” அதாவது ‘போர்க் களத்தின் ராணி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதியில் மக்களுக்கு உதவுவதற்காகவே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தோழர் அகல்யா, அதே பகுதியில் 1961இல் மும்பை நகரில் நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, 1977 வரை தொடர்ச்சி யாக பணியாற்றினார். 1977களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக தனது பணியினை தொடர்ந்ததோடு ஏழை மக்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்தும் அவர்களின் துயரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பதிவு செய்தார்.
1962இல் ஏற்பட்ட இந்திய -சீன எல்லைப் பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஒரு தீர்வினை முன்வைத்தனர். இதற்காக அகல்யா மற்றும் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டு 1962லிருந்து 1966 வரை கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாபெரும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சரியான நோக்கம் மற்றும் திட்டமிடல் களோடு 1964 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் சிபிஐ பிரிந்து சிபிஐஎம் உரு வாக்கப்பட்டது. 1967 இல் கட்சியில் ஏற்பட்ட அதிதீவிர போக்கை கட்சியின் பின்புலத்தில் இருந்து கடுமையாக எதிர்த்தார்
தோழர் அகல்யா. 1970களில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கொல்கத்தாவில் உருவாக்கப் பட்டது. அந்த தொழிற்சங்கத்தினை மகா ராஷ்டிராவில் கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்தார். விரைவில் அம்மாநில தொழிற் சங்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அகில இந்திய தொழிற்சங்க மாநாடு மும்பையில் 1975 மற்றும் 1987 களில் நடை பெற்றது. மாநாட்டு வரவேற்புக்குழுவில் சிறப்பாகப் பங்காற்றியதோடு சிஐடியுவின் பொது ஆலோசகராக 1975ஆம் ஆண்டு தேர்ந் தெடுக்கப்பட்டார். அத்தியாவசியப் பொருட் களின் விலை ஏற்றத்தின் காரணமாக கையில் பூரிக் கட்டையை பிடித்துக் கொண்டு மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்களை அணிதிரட்டி எழுச்சிகர மான போராட்டத்தினை 1970களின் ஆரம்ப காலத்தில் நடத்தினார். அவரோடு மிருனாள் கோரே, தாரா ரெட்டி மற்றும் பல பெண் முக்கியத் தலைமைகள் பங்கேற்றனர். அகல்யாவின் பின்னால் வெகுண்டெழுந்த பெண்களின் போராட்டம் அரசியல் வர லாற்றில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்ப படுத்தியது. 1975 களில் அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்தார். ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டன. நம் தலைவர்கள் ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் நெருக்கடி நிலையினை எதிர்த்து அகல்யா கடுமையாகப் போராடிய தால் 1975 முதல் 1977 வரை 19 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். இந்திரா காந்தியின் சர்வதிகாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் நெருக்கடி நிலைக்கு எதிராகவும் தேசம் தழுவிய போராட் டங்கள் வெகுவாக எழுந்தன. மும்பையில் நடத்தப்பட்ட ஒவ்வொரு போராட்டங்களிலும் அகல்யாவின் ஈடுபாடு முதன்மையானது. மும்பை வடக்குத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் அறி விக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக அளவில் வாக்குகள் பெற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற அதே தேர்தலில் தோழர் லக்கான் கோம் மற்றும் கங்காதர் அப்பா புரண்டே போன்ற தோழர்களும் சி.பி.எம் சார்பாக மகாராஷ்டிராவில் லோக்சபா மக்களவை உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
1978களில் நடைபெற்ற 10ஆவது ஜலந்தர் மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பின ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரா வில் கட்சியின் மாநிலத் தலைமையில் பல வருடங்களாக பழம்பெரும் விவசாய சங்கத் தோழர் கோதாவரி பாருலேகர் மற்றும் தோழர் அகல்யா மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். 1978 களிலிருந்து 2005 வரை 27 வருடங்கள் தோழர்அகல்யாஅவருக்கான பொறுப்பினை மிகவும் சிறப்பாகச்செய்தார். பின்னர் வயது முதிர்ச்சியாலும் நோயினாலும் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார். 1983இல் இருந்து 1986 வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் சிபிஎம் மாநில செயலாளராக பதவி வகித்தார். நாட்டிலேயே சிபிஎம் வர லாற்றில் தோழர் அகல்யா மட்டுமே கட்சி யின் மாநிலச் செயலாளராக பதவி வகித்தவர். அவருடைய கண்நோய் தீவிரம் அடைந்ததன் காரணமாக பதவியில் இருந்து விலகினார். 1979இல் சி.ஐ.டி.யு வில் இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விமலா ரணதிவே, மற்றும் சுசீலா கோபாலன் போன்ற தோழர்களோடு இணைந்து உழைக்கும் பெண்களுக்கான முதல் அகில இந்திய மாநாட்டினை 1979களில் தமிழ்நாட்டில் நடத்தினார். அதன் விளைவாக உழைக்கும் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு குழு என்பது உருவாக்கப்பட்டது. அந்த ஒருங் கிணைப்புக் குழுக்களின் மூலம் பெண்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதிலும் அமைப்பின் அனைத்து மட்டத்தில் இருந்தும் பெண்கள் வேலை செய்வதை அதிகப்படுத் தினார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்களில் தோழர் அகல்யாவும் ஒருவர். 1981 ஆம் ஆண்டு சென்னை மாகா ணத்தில் நடைபெற்ற மாதர் சங்க மாநாட்டில் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அளவிலான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலமாக தனது கடமை களை திறம்படச் செய்ததோடு மகாராஷ் டிரா மாநிலத்தில் மாதர் சங்கத்தின் ஆதரவாள ராக நீண்டகாலம் செயல்பட்டு வந்தார். மாதர் சங்கம் மற்றும் தொழிற்சங்கம் என அனைத்து பணிகளிலும் தன்னை முழுவதுமாக ஈடு படுத்திக் கொண்டு அதன் அனைத்து போராட் டங்களிலும் பங்கெடுத்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிலையத்தின் நவீன தாராளமயக் கொள்கை கள் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்டபோது அதற்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை தொழிற்சங்க இயக்கம், கட்சி மற்றும் மாதர் சங்கம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார். வகுப்புவாதம், சாதியப்பிரிவினை, பாலின பாகுபாடு ஆகியவற்றை கடுமையாக எதிர்த்த அவர் கண் நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் 80 வயதினை கடந்து இருந்தாலும் துடிப்போடு ஆற்றல் மிக்க தலைவராக எப்பொழுதும் போராட்டக் களத்தில் செயல்படுவது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுகளுக்கு எப்பொழுதும் முன்னுதாரணமாக இருந்தார்.
அவருடைய இணையர் தோழர் பி.பி.ரங்கனேகர் 95ஆவது வயதில் பிப்ரவரி 8,2008ஆம் ஆண்டு மறைந்தார். 63 வருட உறவு பிரிந்தது அவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ஒரு வருடத்திற்கு பிறகு ஏப்ரல் 19, 2009 இல் தன்னுடைய 87 வயதில் இயக்கத் தில் இருந்தும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் தன்னுடைய சிந்தனையையும் பங்களிப்பை யும் முழுவதுமாக நிறுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 67 வருடங்களாக கம்யூனிச இயக் கத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் தோழர் அகல்யா ரங்கனேகரும், பி.பி.ரங்னேகரும் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை கட்சியின் மீது முழு ஈடுபாடு கொண்டிருந்தனர். தோழர் அகல்யா வின் இறுதி ஊர்வலத்தில் கட்சி மற்றும் அப்பாற்பட்ட ஏராளமானோர் அவருக்கு கண்ணீரோடு இறுதி அஞ்சலி செலுத்தினர். தோழராகிய அவர் மகத்தான மனிதரும் கூட. அவர் அடிக்கடி மும்பையில் இருக்கிற தலைமைச் செயலகத்திற்கு சென்று வருவார். அவர் செல்லும் போதெல்லாம் முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் மற்ற கட்சியினர் மரியாதை செலுத்தினார்.
ஆனாலும் அகல்யா அதை விரும்ப மாட்டார். மக்களுடைய பிரச்சனைகளை பேசுவதற் காக மட்டுமே அவர்களை அணுகியதால் அவர்களும் இவருடைய கோரிக்கையை மறுக்க இயலாமல் நிறைவேற்றினர். இது அவருடைய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று. 40 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றிய போது பல்வேறு பிரச்சனை களுக்காக போராட்டங்கள் நடத்தினோம். சாலை மறியல் மற்றும் தலைமைச் செயல கத்தை முற்றுகையிட்டோம் காவல்துறையின் கைது மற்றும் லத்தியடிகளை எதிர்கொண் டோம், அப்போது போலீசில் சிறை கொட்ட கைக்குள் எங்களை சந்தித்து ஊக்கப்படுத்தும் முதல் தோழர் ’அகல்யா அத்தை’ என்று அன்போடு நாங்கள் அழைக்கும் அவர் மட்டுமே. பல்லாண்டுகளாக ஒவ்வொரு நாள் காலையிலும் மும்பையில் இருக்கிற அவரது வீட்டின் முன்பு பதவியில் இல்லாமல் இருந்தாலும் கூட தங்களுடைய குறைகளை கூறுவதற்காக மக்கள் கூடுவதும் அவரும் தன்னால் இயன்றவரை அவர் பல பிரச்சனை களை சரி செய்ய முயல்வதும் உண்டு. மக்களின் நாடித்துடிப்பில் ஒரு வினோதமான பிடியை அகல்யா உருவாக்கினார் என்பது பரந்து விரிந்த செயல்பாடுகளில் இருந்தது. கட்சியினுடைய மாநில செயற்குழு எதிர்கால இயக்கங்கள் குறித்து முடிவெடுக்கும் போது இத்தகைய குணத்தினால் அவர் எங்களுக்கு உதவி செய்ய முடிந்தது.
அகல்யாவின் எளிமையான நடைமுறை வாழ்க்கை அனைத்து தோழர்களுக்கும் அவர்மீது அன்பு கலந்த மரியாதை செலுத்த காரணமாக இருந்தது. எப்பொழுதும் சிக்கனத் தையும் தன்னடக்கத்தையும் கடைப்பிடிப்பார் அவருடைய 60 ஆண்டு கால அரசியல் வாழ் வில் கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதி யாகவும் முரண்பட்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கூட அவருக்கு மரியாதை செய்தனர். ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக அகல்யா இருந்தார். மார்க்சியத்தின் மீதும் லெனினியத்தின் மீதும் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கொடாத உறுதியான அப்பழுக்கற்ற நம்பிக்கை யைக் கொண்டிருந்தார் நாட்டின் மீதான அவரு டைய அன்பும், அக்கறையும் எல்லையற்றது மக்களுக்கும், கட்சிக்கும் அளவிட முடியாதது ஆகும். இருவரும் சேர்ந்து கட்சியின் மத்தியக் குழு கூட்டத்திற்காக டெல்லி செல்லும் போது ஒன்றாக பயணிக்கிற போது அவருடைய உரையாடலில் இருந்து இதனை அடிக்கடி நான் உணர்ந்திருக்கிறேன். அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்தாலும், அவருடைய தோழராக நான் எந்தவிதமான தயக்கமுமின்றி பயணித்திருக்கிறேன்.
மகாராஷ்டிரா மாநிலச்செயலாளராக நான் இருந்தபோது கட்சிய அலுவலகமான ஜன சக்தியில் நீண்ட நேரம் வரை செலவிடு வோம். மேலும் அசோக் என்ன இப்போது வெளியில் செல்ல முடியாது. கண் பார்வை குறைபாட்டினால் பத்திரிகையையும் படிக்க முடியவில்லை. தோழர் பி.பி.ஆரும் இப்போது என்னோடு இல்லை அதனால் தான் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன் என்று குறிப்பிட்டு அவர் கட்சியிலும், வர்க்க, வெகுஜன அரங்கங்களிலும் புதிதாக என்ன நடக்கிறது என்று கேட்பார். அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பை கண்டு நான் கண்ணீர் மல்கி என்ன நடக்கிறது என்பதை விளக்கமாகச் சொல்வேன். இது எனக்கும் அவருக்குமான கடந்த கால நினைவலைகள்.
தமிழில்: சோயா காஸ்ட்ரோ