போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக 2 ஆம் வகுப்பு மாணவர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்
திருச்சிராப்பள்ளி, அக்.16 - திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த மாதவன்-காவியா தம்பதியினரின் மகனும், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் எம்.கே மிர்த்திவிக், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து சாய்ஜி ரோலர் அகாடமி வரை 6 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் சென்றவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 2 வயது சிறுவனின் இந்த சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதுடன், சாதனை சான்றிதழையும், அப்துல் கலாம் “யங் அச்சிவர்ஸ்-2025” விருதையும் பள்ளி முதல்வர் வித்யா மாணவருக்கு வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் மாநிலச் செயலாளரும், சாய்ஜி ரோல்பால் அகாடமி நிறுவனருமான கோவிந்தராஜ், துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
