tamilnadu

img

75 ஆண்டுகால அடித்தளத்தை அகற்றிவிட்டு புதிய அடித்தளம் யாருக்கானது? - சு. வெங்கடேசன் எம்.பி.,

75 வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில் கடமைக்கும் உரிமைக்குமான தொடர்பை குடியரசுத் தலைவர் உரை எடுத்துச் சொல்கிறது. போராடுவதே கடமை என்கிறது. கடமையை செய்யுங்கள்; உரிமைக்கு குரல் கொடுப்பதை அதிகமாகவே செய்துவிட்டோம் என்று இரண்டையும் பிரித்த பிரதமரின் கருத்தோடு எந்த புள்ளியிலாவது இணைகிறதா இது!?  அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதைப் பற்றி உரை பேசுகிறது. 75 ஆண்டு களாக ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதுதான் பொருளா!? கோவிட் தடுப்பூசி பற்றி பெருமையாகப் பேசுகிறது குடியரசுத் தலைவர் உரை. 25% தனியாருக்கு தந்து 4% கூட அவர்கள் போட வில்லை என்ற தங்களின் கொள்கை தோல்வி யை ஒரு வரியாவது சொல்லி இருக்கலாமே!  அம்பேத்கர் காண விரும்பிய சமூகம் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற மேற்கோள் அருமைதான்.

ஆனால் காலனி  ஆதிக்கத்தின் கால் சங்கிலியான “தேசத் துரோக” சட்டம் இன்றும் மாற்றுக் குரல் கொடுப் போரின் மீது பாய்கிறதே! “பத்ம” விருதுகள் எப்படி அறிவித்து இருக்கிறோம் என்று சமத்து வம் நோக்கிய நகர்வாக சுட்டிக் காட்டி இருக் கிறீர்கள். விருதுகள் அல்ல நகர்வுகள். உயர் கல்வி நிறுவனங்களில் இன்று வரை ஒடுக்கப்பட்டவர்களை உள்ளே நுழைய அனு மதிக்க மறுக்கிறீர்களே! அதைக் கொடுங்கள். சகோதரத்துவம் பற்றி உங்கள் உ.பி. முதல்வர் யோகிக்கு கற்றுக் கொடுங்கள். 80 (எதிர்) 20 கணக்கு தேசத்தின் நல்லிணக்க கணக்கை முடித்துவிடாதா? பசி மரணங்களை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒழித்துவிட்டோம் என் கிறீர்களா! அப்படி ஒழித்த இந்தியாவா உலகப் பசி குறியீட்டில் 116 நாடுகளில் 102 வது இடத்தில் உள்ளது? உலகின் வளர்ச்சி குன்றிய, எடை குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒன்றை இங்கே வைத்திருக்கிறது! பசியை ஒழியுங்கள், உண்மையை ஒழிக்காதீர்கள். குடியரசுத் தலைவர் உரையில்...  

விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் பற்றிய பத்திகள் 22 முதல் 29 வரை எட்டுப்  பத்தி என்ற அளவில் பெரிதாக உள்ளது. ஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதே சோகம். எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்ந்து வலியுறுத்தும் C2 + 50% குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி ஒரு வரி கூட இல்லை. பிரதமர் கேட்ட மன்னிப்பு, அதற்கு பின்னர் என்ன நேர்மறை நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.  பெண்களுக்கு உஜ்வாலா கேஸ் சிலிண்டர் திட்டம் வெற்றி என்று ஒரு வரியில் அறிக்கை கடந்து செல்கிறது. அடுப்பைக் கொடுத்து விட்டு ஆகாயத்திற்கு கேஸ் விலையை கொண்டு போய் விட்டதைப் பற்றி இன்னொரு வரி எழுதி இருக்கலாம். ஒரு மாநிலத்தில் 99% உஜ்வாலா சிலிண்டர்களுக்கு மக்களால் கேஸ் நிரப்ப முடியவில்லை என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்டீர்களோ என்னவோ!  5ஜி தொழில் நுட்பம் நோக்கி இந்தியா நகர்ந்து விட்டது என்று பெருமை வேறு...

உங்கள் கைகளில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறு வனம், 4ஜி-க்கு அனுமதி தாருங்கள் என்று எத்த னை ஆண்டுகளாக மன்றாடுகிறது! யாருக் காக இந்த தாமதம்... பிரதமர் படத்தை விளம்பரத்தில் போட்டவர்களுக்காகவா?  சிறு தொழில் மீட்சி பற்றி பேசி இருக்கிறீர் கள். நீங்கள் அனுப்பிய வட்டி மானியத் தொகை எங்களுக்கு வராததால் முழு வட்டியைக் கொடு ங்கள் என்று வங்கிகள் குறு சிறு நடுத்தர தொழில்களை நெருக்குவது தெரியாதா?

ரயில்வே விரிவாக்கம் பற்றி பேசி இருக் கிறீர்கள்! எல்லாம் தனியார்மயம், பணமாக்கல் பற்றி பேசுகிற நேரத்தில் உங்களின் செல வுகள் பற்றி சந்தேகம் வருகிறதே. இவ்வளவு செலவுக் கணக்கு காண்பிக்கும் நீங்கள் மூத்த  குடிமக்கள் சலுகைக் கட்டணத்தை பறித்து இன்னும் திருப்பித் தராமல் அல்லாட விடு கிறீர்களே... எப்போது தருவீர்கள் என்று சொல்லி இருக்கலாம்.  விமான தள மேம்பாடு பற்றி குடியரசுத் தலைவர் உரை பேசுகிறது. சில ஊர்கள் பெயர் களைக் குறிப்பிட்டு கூட சிலாகிக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் மட்டும் என்ன உங்களுக்கு மனத் தடை! தமிழகம் என்றால் புறக்கணிப்பு என்று தான் பொருளா? இப்படி நிறைய கேள்விகள் மாண்பமை குடியரசுத் தலைவர் அவர்களே, வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி சுருங்குகிற  வரை உண்மைக்கும் உங்கள் அரசிற்குமான இடைவெளி நீடிக்கத் தான் செய்யும்.