tamilnadu

img

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட 25,000 விவசாயிகள், குடியிருப்புகள், வேளாண் நிலங்கள்

இன்று சிபிஎம் பெருந்திரள் தர்ணா

தனியார் வன பாதுகாப்புச் சட்டத்தி லிருந்து குமரி மாவட்ட விவசாயி களுக்கு விலக்கு அளித்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தி சனியன்று (ஏப்.23) மாலை 3 மணிக்கு குலசேகரம் அரசமூடு சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந் திரள் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. 

குலசேகரம், ஏப்.22- கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளை ஒட்டிய 11,800 ஹெக்டேர் வேளாண் நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் சுமார் 25 ஆயிரம் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களை விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ, வங்கிகளில் கடன் பெறவோ முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடி யிருப்புவாசிகள் பதற்றத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதம் பாதுகாக்கப்பட்ட காடு கள் உள்ளன.  ஆனால், வனப்பரப்பு 59.5 சதவிகிதம் உள்ளது. தமிழகத்திலேயே நீலகிரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வனப்பரப்பு உள்ள மாவட்டம் கன்னியாகுமரி.  இதில் பெரும்பகுதி வனம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாக மாவட்டத்தின் மேற்கில் கேரளத்தை ஒட்டி உள்ள விளவங்கோடு தாலுகா, வடக்கே பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை களை உள்ளடக்கிய திருவட்டார் தாலுகா,  மேற்கில் தடிக்காரன்கோணம், ஆரல்வாய் மொழி பகுதிகளை உள்ளடக்கிய தோவா ளை தாலுகாவில் உள்ளன. இவற்றை ஒட்டிய வேளாண் நிலங்களில் மேற் கொள்ளப்படும் இயற்கை சார்ந்த விவ சாயமே இப்பகுதி மக்களின் வாழ்வா தாரம். அரசிடமிருந்து பட்டா பெற்று பல தலைமுறைகளாக மக்களின் பயன் பாட்டில் உள்ள இந்த நிலங்களின் உரிமை க்கு தனியார் காடுகள் பாதுகாப்புசட்டம் மூலம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினரின் முட்டுக்கட்டை நீடிக்கிறது

இதுகுறித்து ரப்பர் விவசாயிகள் சங்க செயலாளர் சி.பாலச்சந்திரன் நாயர் கூறுகையில், “1949 முதல் தமிழ்நாட்டில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. அப்போது கேரளத்து டன் இருந்த கன்னியாகுமரி மாவட்டத் திற்கு அங்குள்ளதுபோல்  இச்சட்டத் திலிருந்து விலக்கு தொடர்ந்தது. 1979  இல்தான் குமரி மாவட்டம் இந்த சட்டத்தில்  உட்படுத்தப்பட்டது. ஆனால், இதுகுறித்த விவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை. வழக்கம்போல் விவசாயிகள் தங்களது தேவைகளுக்காக நிலங்களை விற்றனர். வங்கிகளில் அடமானம் வைத்து  கடன் பெற்றனர். பெயர் மாற்றம் செய்தனர். 1979 முதல் செய்யப்பட்ட இத்தகைய நிலப்பரிமாற்றம் செல்லாது என திடீரென ஒரு அறிவிப்பை வனத்துறை செய்தது. இதன் மூலம் 10 சென்ட் நிலம் உள்ள ஏழை முதல் 500 ஏக்கர் உள்ள பெரிய விவசாயிகள் வரை அதிர்ச்சி அடைந்தனர். மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. 2010 இல் தமிழக முதல்வர் கலை ஞரிடம் இதுகுறித்து முறையிட்டோம். அப்போது துணை முதல்வராக இருந்த  மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரி கள், வனத்துறையினர் விவசாயிகள் தரப்பை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவாக 1949 முதல் 2010 வரை நடந்த நில பரிமாற்றங்கள் அனைத்தும் செல்லும் என அறிவிப்பு  செய்யப்பட்டது. ரப்பர், தென்னை, வாழை மற்றும் விவசாய பயிர்களுக்கு இச்சட்டத் தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தனியார் வன பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலங்களின் பரிமாற்றம், முதிர்ந்த ரப்பர் போன்ற மரங்களை வெட்ட அனு மதி அளிக்க மாவட்ட ஆட்சியர் தலைமை யிலான குழுவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டது. தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் 4 ஏ என்கிற பிரிவு சேர்க்கப் பட்டது. அதுமட்டுமன்றி தனியார் பாது காப்பு காடுகள் சட்டத்திற்கு நிரந்தர மாக விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக  ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டது. ஆனாலும் வனத்துறையினரின் முட்டுக்கட்டை நீடிக்கிறது” என விவரிக்கிறார்.

அனுமதி இருந்தும் பலன் இல்லை

குலசேகரத்தைச் சேர்ந்த கனகராஜ், முதிர்ந்த ரப்பர் மரங்களை மொத்தமாக தோட்டங்களில் இருந்து வாங்கி வெட்டி விற்பதை தொழிலாக கொண்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தனது அனுபவத்தை வேதனையுடன் குறிப்பிட்டார். தடிக்காரன்கோணம் கொத்த னம் பள்ளத்தில் அமலன் என்பவருக்குச் சொந்தமான ரப்பர் தோட்டத்தில் உள்ள 990 முதிர்ந்த மரங்களை பதினெட்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மரங்களை வெட்டுவதற்கான மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி யின் அனுமதிக் கடிதத்தோடு மரம் வெட்டச் சென்றுள்ளார். திடீரென உதவி வனப் பாது காவலர் (ஏசிஎப்), மரம் வெட்ட முதன்மை வனப்பாதுகாவலரின் (சிசிஎப்) அனு மதி தேவை எனவும், சூழலியல் மண்ட லத்தில் இந்த பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகராஜ் கூறுகையில், மரம் வெட்ட ஹிட்டாச்சி எந்திரம், 2 லாரி, 3 டெம்போ, 32 தொழிலாளிகளுடன் சென்றேன். அனு மதி இருந்தும் மரம் வெட்ட முடியாமல் வெறும் கையோடு திரும்பினேன். நில உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறேன் என்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் கூறுகையில், மருத்து வம், திருமணம் போன்ற தேவைகளுக்கு சொந்த நிலங்களை பயன்படுத்த முடி யாமல் ஏராளமான ஏழைக் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. எனவே தனி யார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் கேரளா வைப் போன்று குமரியிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

- சி.முருகேசன்