மதுரை, ஆக.29-
திருவாவடுதுறை ஆதீன மடத் தில் நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கள் 2 பேரை நியமனம் செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த சிவ இளங்கோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவாவடு துறை ஆதீனத்திற்கு 75 கோயில்கள் உள்ளன. பல மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ஏரா ளமான சொத்துக்கள் இருக்கின்றன. இந்த ஆதீனத்தை 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பர மாச்சாரிய ஸ்வாமிகள் கவனித்து வருகின்றார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக திரு நெல்வேலி, தென்காசி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வாடகை, குத்தகையில் உள்ளது. பல ஆண்டுகளாக ஆதீன மடத்தின் அனுமதியோடு இங்கு விவ சாயம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் சரியாக குத்தகை பணம் செலுத்துவதில்லை. எனவே வாடகை, குத்தகை வசூல் களை சீரமைக்கவும், சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதி பதி ஸ்ரீமதி முன்பு நடைபெற்றது.
அப்போது, வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்ப தாகவும் , லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்,
மேலும் இந்த வழக்கில் திரு வாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்த மான நிலங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளை சீர்செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நிய மித்து நீதிபதி உத்தரவிட்டார்.