தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நிர்வாக கட்டடத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.