tamilnadu

சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சென்னை,மார்ச் 24- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக கடந்த 18 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் (மார்ச் 19) அன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கி மார்ச் 24 வரை நடைபெற்றது.  பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதன் பிறகு, மீண்டும் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது.