ஆதிரையும் எயினியும்!
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப். 2 தொடங்கி ஏப்.6 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற கலைநிகழ்வில், வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே!- என்று துவங்கும் ‘மகா கவி’ பாரதியின் ‘தமிழ்மொழி வாழ்த்து’ மற்றும் ‘நாட்டு வாழ்த்து’ பாடல்களுக்கு ஆதிரை (10), எயினி (7) ஆகிய இரு குழந்தைகள் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இரு பாடல்களுக்குமான பயிற்சியை இருவரும் ஒரு நாள் மட்டுமே எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் மதுரை செயிண்ட் ஜோசப் நர்சரி - பிரைமரி பள்ளியில் முறையே 5 மற்றும் 3-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். “பரதநாட்டியம் என்றால் பொதுவாக கடவுள் சார்ந்த பாடல்களாகவே இருக்கும். ஆனால், இந்த மேடையில் எங்கள் தாத்தாவிற்குப் பிடித்த பாரதியார் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடினோம்” என்றனர். இவர்களது தாத்தா வேறுயாருமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் - மேடைக்கலைவாணர் தோழர் என். நன்மாறன் தான்... தோழர் நன்மாறனின் மூத்த மகன் குணசேகரன் - லாவண்யா தம்பதியினரின் குழந்தைகள் தான், ஆதிரை - எயினி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்வில் இடம் பெற்ற கேரளம் மாநிலத்தின் பாரம்பரிய நிகழ்வான “சிங்காரி மேளம்”.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டுப் பேரணி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. செம்படைப் பேரணியைக் காண படத்தில் உள்ள முஸ்லிம் சகோதரி தனது குழந்தை- குடும்பத்தினர்-மற்றும் தோழர்களுடன் மாலை 4.30 மணிக்கு வண்டியூர் மஸ்தான்பட்டி அருகே உள்ள மருத்துவமனை அருகே காத்திருந்தார். எனினும், பேரணி மாலை 6.08 மணிக்கே வந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், தனது குழந்தையுடன் காத்திருந்து பேரணியை பார்த்தார்.
சிபிஎம் அகில இந்திய மாநாடு : தீக்கதிர் செய்திக்குழு
எம்.கண்ணன், அ.விஜயகுமார், அ.மாரிமுத்து, மனோஜ் பிரசாத், ஜீவா, கோகுல், வே.தூயவன், சு.மதியழகன், ச.நல்லேந்திரன், செ.கவாஸ்கர், ச.லெனின், ஜெ.பொன்மாறன், பா.ரணதிவே, சுகினா, ஆர்.நித்யா, எம்.ராஜேஸ்வரி, எம்.சதீஷ்குமார், எம்.கிரிஜா, அ.அன்வர் உசேன், ராஜ்பிரவீன், எஸ்.ஏ.மாணிக்கம்