tamilnadu

img

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சேங்காலிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சேங்காலிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

திருவாரூர், மே 19-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 53 பேர் எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.  செ. கமலஸ்ரீநிதி என்ற மாணவி 494- மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், 20 பேர் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருப்பதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சௌந்தரராஜன், சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.