tamilnadu

img

கோவிட் இறப்புகளை மறைத்த மாநிலங்கள் அறிவித்ததைவிட ஏழு மடங்கு அதிகம்

திருவனந்தபுரம், ஜன.25- இந்தியாவில் கோவிட் இறப்புகள் பதிவானதை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பிரபல விஞ்ஞானி யும் நோயியல் நிபுணருமான டாக்டர். பிரபாத் ஜா நிபுணர்களைக் கொண்டு தயாரித்த சிறப்பு ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான மக்களால் கோவிட் அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதில் 4,89,409 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 2020 முதல் ஜூலை 2021 வரை, 29 சதவிகிதம் இறப்பு கள் கோவிட் காரணமாக நிகழ்ந்தன. இது சுமார் 32 லட்சமாகும். இதில், 27 லட்சம் பேர் கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை காலமான 2021 ஏப்ரல் - ஜூலை மாதங்களில் இறந்துள்ள னர்.

கோவிட் இறப்புகள் பதிவானதை விட ஏழு மடங்கு அதிகம் என்பதை இது  குறிப்பிடுகிறது. இதுபோல் கோவிட் அல்லாத இறப்புகளும் அதிகரித்தன. கோவிட் மரணத்தை துல்லியமாக  பதிவு செய்து, நிதி உதவி விண்ணப்ப ங்கள் மீது கேரளா மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தர வின்படி மேல்முறையீட்டில் கோவிட்  இறப்பு பட்டியலில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டனர். ஜன.22 சனிக்கிழமை நிலவரப்படி, கேரளத்தில் 51,739 கோவிட் இறப்புகள் உறுதி செய்யப் பட்டுள்ளன. இதில் மேல்முறையீடு செய்யப்பட்டு போதுமான ஆவ ணங்கள் இல்லாத 20,546 இறப்பு களும் அடங்கும், அவை உறுதிப்படு த்தப்படவில்லை. நிதி கேட்டு 32,521 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அதில் 28,238 அங்கீகரிக்கப்பட்டன. 24,658  நபர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப் பட்டது. மேலும், வறுமைக்கோடுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களுக்கு சிறப்பு உதவி கோரி 11,273 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 2019 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதிகளில் நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் இறப்புகள் மறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கேரள அரசு வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் செய்து உதவி முகாம்களையும் நடத்தியது.