திருச்சி, பிப்.10- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி யுள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ரஷ்ய நாட்டின் நிதி உதவியுடன் கூடங் குளத்தில் ஏற்கனவே தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. 3 மற்றும் 4வது உலைகளில் இருந்து மின் உற்பத்தியை தொடங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 5வது அணு உலை களுக்கு அருகிலேயே 6வது அணு உலையை அமைக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முத லீட்டில் இந்த பணிகள்திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அணுமின்நிலை யத்தில் உண்டாகும் அணு கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இந்தியா விற்கு தற்போது ஆழ்நில அணுக்கழிவு மையம் தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுக் கழிவு சேமிப்பு மையத்தை கட்டுவதற்கான பணியினை தேசிய அணுமின் கழகம் முன்னெடுத்துள்ளது. அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் அறி விப்பை வெளியிட்ட அணுமின் கழகம், விரு ப்பம் உள்ள நிறுவனங்கள் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினர் எதிர்ப்பு தெரி வித்தும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், கூடங்குளம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யிருக்கிறது. கூடங்குளம் வளாகத்திலேயே அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைப்பு கள், கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை உடனடியாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.