சென்னை, ஜன. 1- தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சிலவற்றிற்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன. குறிப்பாக திரும ணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேர் மட்டுமே அனும திக்கப்படுவர் என அறிவிக் கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதி கள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறை விடங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர் என்றும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக் கள் 50 விழுக்காடு வாடிக்கை யாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், முதலமைச்சர் வெளியிட்டு ள்ள அறிவிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் நடத்த அனு மதிக்கப்படும் என்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனு மதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணி மற்றும் நகைக்கடை களில் ஒரே சமயத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாள ர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவி க்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாடுமிடங்கள், உணவகங்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும் என்றும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலை யங்கள் 50 விழுக்காடு வாடிக் கையாளர்களுடன் செயல் பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனு மதிக்கப்படுவர் என்றும், மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
திரை யரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளும் 50 விழுக்காடு பார்வை யாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி விளை யாட்டு அரங்குகளில் நிலை யான வழிகாட்டு நெறிமுறை களை பயன்படுத்தி விளை யாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் உள்விளையாட்டு அரங்கு களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பார்வை யாளர்களுடன் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவைகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர் களுடன் செயல்பட அனு மதிக்கப்படும் என்றும், அனைத்து பொருட்காட்சி, புத்தகக் காட்சிகள் தற்போ தைக்கு ஒத்திவைப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.