திருவாரூர், டிச.3- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் திருவாரூர் நக ராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ஏ.சிங்காரவேலன் விளக்க உரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சலாவுதீன், மாவட்டப் பொருளாளர் கேசவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் விஜய், மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ், ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் மாவட்ட தலைவர் ஏ.கே. வேலவன் தலைமையில் நூற்றுக் கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோரிக்கை அடங்கிய மனு ஆணையரிடம் வழங்கப்பட் டது. தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் முதல் மருத்துவ செவிலியர்கள் வரை உள்ள காலிப்பணியிடங்களை வரும் காலங்களில் ஒப்பந்த முறை யில் நிரப்புவதையும், 35 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களை 3417 ஆக குறைக்கும் அர சாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சி மற்றும் டி பிரிவு அரசு வேலையை தனியார் துறை மூலம் ஒப்பந்த அடிப்படை யில் எடுக்கும் மனித வள மேலா ண்மை குழு அரசாணை 115-ஐ ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.