‘கீழடி அறிக்கையை உள்ளது உள்ளபடியே வெளியிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’
தமிழ்நாடு அரசுக்கு ஆதவன் தீட்சண்யா வேண்டுகோள்
திருச்சி, ஜுன் 14- ஒன்றிய தொல்லியல் துறை, கீழடியின் தொன்மையைக் குறைப்ப தையும், ஆய்வு அறிக்கையை திருத்த சொல்வதைக் கண்டித்தும், கீழடி ஆய்வ றிக்கையை உள்ளது உள்ளபடியே வெளியிட வலியுறுத்தியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் கிழக்கு மண்டலம் (திருச்சி ராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம், பெரம்பலூர், அரியலூர்) சார்பில் வெள்ளியன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் நோக்கவுரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.நீலா, கவிஞர் ஜீவி, சிவ.வெங்க டேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கவிஞர்கள் கீதா, நேசன் மகதி ஆகி யோர் கவிதை வாசித்தனர். புதுக் கோட்டை தமிழ்ச்சங்கம் கவிஞர்.தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், மக்கள் கலை இலக்கிய கழக கோவகன், சிரா இலக்கிய கழகம் அனிதா, பொங்கு தமிழ் இளையோர் இயக்கம் முனைவர்.தி.நெடுஞ்செழி யன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தமுஎகச பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா நிறைவுரையாற்று கையில்,”கீழடியில் கிடைத்திருக்கக் கூடிய 7 லட்சம் பானை ஓடுகளில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பானை ஓடுகளை வகைப்படுத்தி பல்வேறு சான்றுகளை ஒப்பிட்டு பார்த்து இன்றை க்கு 5,300-க்கும் மேற்பட்ட தொல்லி யல் சின்னங்கள் 2,800 ஆண்டுக ளுக்கு முந்தைய ஒரு நகர நாகரிகம் என்பது நிறுவப்பட்டுள்ளது. உலகளாவிய பல்வேறு தொல்லி யல் ஆய்வு நிறுவனங்கள் கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் சின்னங்க ளை ஆய்வு செய்து அந்நிறுவனங்கள் இது 2,800 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் களம் என்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றன. இவ்வளவு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை யை ஒன்றிய அரசு கடந்த 8 ஆண்டு களுக்கு மேலாக வெளியிடாமல் இழுத்த டித்து வருகிறது. பல்வேறு தமிழ் அமை ப்புகள், இலக்கிய, கலை இலக்கிய, வரலாற்று அமைப்புகள், அரசியல் கட்சிகள் கேட்ட பிறகும் கூட இந்த அறிக்கையை வெளியிடாமல் இருக்கி றது. வேறு வழியில்லாமல் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட சூழ்நிலையில் இப்போது ஒன்றிய அமைச்சர் அறிவியல் பூர்வ சான்று கள் இன்னும் கூடுதலாக தேவைப்படு கிற காரணத்தால் நாங்கள் வெளியிடா மல் வைத்திருக்கின்றோம். ஆகவே, இந்த அறிக்கையை திருத்தி எழுதி அனுப்புங்கள் என அமர்நாத் ராம கிருஷ்ணனுக்கு அனுப்பி இருக்கின் றோம் என்ற தகவலை சொல்கிறார். அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன், நாங்கள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கொடுத்திருக்கிறோம். ஆகவே, இதில் திருத்தத்திற்கு அவசியமில்லை என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கீழடி ஆய்வ றிக்கையை உள்ளது உள்ளபடியே வெளியிட மறுப்பு தெரிவிக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டையும், கால அளவை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கீழடி அறிக்கையை உள்ளது உள்ளபடியே வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலின் சரவணன், விஜயகுமார், பாலசுந்தரம், வெங்கடேசன், உதய குமார், செல்வகுமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத் திடலில், கீழடி தொன்மை குறித்த ஓவியங்களை, ஓவியர்கள் வீராச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் வரைந்தனர். ரமேஷ், ஆரூர் மகாலிங்கம் மிடறு முருகதாஸ், சந்திரா ஆகியோரின் இசை பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வி. ரங்கராஜன் நன்றி கூறினார்.