சென்னை,அக்.30- தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் இனிப்பு மற்றும் கார வகைகளின் விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகியுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை யில், “தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகை யான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்க ளிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முழு வதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநி யோகிக்கப்பட்டது. தற் போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிக மாகும் என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கி றோம்” என்று கூறப்பட்டுள்ளது.