காஞ்சிபுரம் மாநகராட்சி 1ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மு.ராபியா பானு, 12ஆவது வார்டில் போட்டியிடும் மு.சூரிய பாரதி, 35ஆவது வார்டில் போட்டி யிடும் இ.கிரிஜா ஆகியோரை ஆதரித்து அ.சவுந்தரராசன் வியாழனன்று (பிப்.17) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் இ.முத்துக்குமார், கே.நேரு, பி.ரமேஷ், டி.ஸ்ரீதர், ஆர்.சௌந்தரி மாவட்டக் குழு உறுப் பினர்கள் எல்.முருகேசன் வி.கே.பெருமாள், ஜி.வசந்தா வி.சிவப்பிரகாசம், எஸ்.உதயகுமார், எம்.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.