சென்னை, பிப். 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள 3 நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளியன்று (பிப்.26) சென்னை புத்தகக் காட்சியில் நடை பெற்றது. பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘அருவஜீவிகள்’ நுலை முனைவர் எம்.சீனிவாசன் வெளியிட, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார். ‘ஒரு எதிர் கேள்வியின் தத்துவம்’ நூலை பேரா.கல்பனா கருணாகரன் வெளியிட, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வாவும், ‘சென்னையின் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம்’ நூலை பேரா.வி.முருகன் வெளியிட சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனும் பெற்றுக் கொண்டனர். இந்த நூல்கள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சைதை ஜெ ஆகியோர் உரையாற்றினர். நூலாசிரியர் ஏ.பாக்கியம் ஏற்புரையாற்றினார். முன்னதாக பத்திரிகையாளர் வே.பெருமாள் வரவேற்று பேசினார்.