tamilnadu

img

சோசலிசம்: மக்கள் எழுச்சியில் மெய்ப்படும் கனவு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச ஆட்சியை உலகில் முதல்முறையாக அமைத்த நாடு சிலி.இதனை வழிநடத்தியவர் சால்வடார் அலெண்டே.இவரின் அரசு மூன்று ஆண்டுகளே நீடித்தது.1973 இறுதியில் சிஐஏவின் உதவியோடு,ராணுவ ஜெனரல் அகஸ்டோ பினோசெட் என்பவனால் அலெண்டோவின் அரசுக் கவிழ்க்கப்பட்டது.

  அலெண்டேவின் ஆட்சியில், சோசலிச யதார்த்தம் என்ற தத்துவார்த்த இயக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டது.இந்த இயக்கம் 1930களில் சோவியத் யூனியனில் நடைமுறைப் படுத்தப்பட்டு, பெரஸ்கா காலத்தில் முடிவுக்கு வந்த ஒன்று.தொழிலாளி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ எண்ணங்கொண்ட அறிவுஜீவிகள் இவ்வியக்கத்தை எப்படி அணுகினார்கள் என்பதனை,ரூயீஸ் என்ற இயக்குநர் ஆவணப் படமாக்குகிறார்.புதிய ராணுவ அரசு ரூயீஸை நாடு கடத்தியது.இவர் 2011ல் இறக்கிறார். இவரது மனைவி வெலேரியா ஷார்மீண்டோ ஒரு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநருமாவார்.இவர், முழுமையடையாத இப்படத்தின் படச்சுருள் நெகடிவ்களை ஆவணக் காப்பகங்களில் தேடிக் கண்டறிகிறார்.சிதிலம டைந்த இதனை நியூயார்க், பெல்ஜியம் மற்றும் போர்ச்சுக் கல்‌ நாடுகளின் தொழில்நுட்ப உதவியோடு புனரமைத்து, ஆவணப்படம் மற்றும் புனைகதை ஆகிய இரண்டும் கலந்த சினிமாவாக(Docu-fiction hybrid film) உருவாக்குகிறார்.50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தை உயிர்பிக்கமுடியும் என்பதையும்,சினிமா ஒரு மாயாஜாலம் என்பதையும் நிரூ பிக்கிறார்.    அலெண்டே ஆட்சியில் பல முதலாளிகள் ஆலையை  மூடிவிட்டு தலைமறைவாகின்றனர்.மூடப்பட்ட ஆலையை, தொழிலாளிகள் கையகப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் புதிய சூழலை எதிர்கொள்ள தொழிலாளிகள்,அறிவுஜீவிகள் அடங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் நடத்திய நுட்பமான உரையாடல்களின் தொகுப்பே இப்படம். 

 சோசலிச நிர்மாணிப்பு தொடர்புடைய பல்வேறு உள்ள டக்கங்களின் மீது, அக்காலத்திய பின்புலத்தில் நடத்தப்பட்ட விவாதங்கள் நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளது.மாற்றங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முடிவுகள் நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன.    குடியிருப்போர் அனைவரும் இலக்கியத் படைப்பில் பங்கேற்க வேண்டும். வர்க்க ஏற்றத்தாழ்வற்ற வகையில்  பொறியாளருக்கும்,அறிவுஜீவிக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தின் சிறுபகுதியை, மக்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். கட்சி உறுப்பினர்களை பல அரங்குகளில் செயல்படும் விதத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கும் கூடங்களாக மாற்ற வேண்டும். இதனை சர்வாதிகாரமற்ற முறையில் சூழலுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்தவேண்டும். நடமாடும்  நூலகம் அமைக்க வேண்டும்.விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும்.  தொழிலாளிகள் கையகப்படுத்திய குடியிருப்பில் மாரி ஜூவனா புகைக்கக்கூடாது,ஒழுங்கீனம் கூடாது, தூய்மை பேணல் போன்ற பலநிபந்தனைகளை,குடியிருப்புக்கழு  கறாராக கண்காணிக்க வேண்டும், போன்ற முடிவுகள் சுவா ரசியமானது.   எதிர்மறை விஷயங்களும் விவாதத்திற்குள்ளாகிறது.கட்சியின் பல அமைப்புகள் செயல்படாமலும், தோழர்கள் கள  நிலையை அறியாமல் கற்பனைக் கோட்டையில் மிதக்கின்ற னர். அமைப்பை வளர்க்க முயற்சிப்பதில்லை. பிற்போக்குவாதி களின் ஆபத்தை உணராமல் உள்ளனர். ஜகார்த்தாவில் 15 நாளில் ஐம்பதாயிரம் கம்யூனிஸ்ட்கள் கொல்லப்பட்டதை மறந்துவிட்டனர். வாழ்வா?சாவா?என்பதே தற்போதைய போராட்டம் என்ற அவர்களது உணர்வுகளை வருத்தத்தோடும் பதிவிடுகின்றனர்.  ஆலையை கையகப்படுத்தியபின், தொழிலாளர்களில் சிலர் பொருட்களைத் திருடுகின்றனர். இதனை சமாளிக்க ஆயுதக் குழுவை உருவாக்கி,இதனை பிற்போக்கு வாதிகளின்  உடைமைகளை பறிமுதல் செய்யவும் பயன்படுத்தலாமென ஆலோசிக்கின்றனர்.

மத்திய பிரிவினரிடத்தில் கட்சி கூட்டத்திற்கு குறைந்தபட்ச  தோழர்கள் கூட பங்கேற்காமல் உள்ளனர்.குட்டி முதலா ளித்துவ சிந்தனை ஊடுருவி,முதுகுக்கு பின் பேசும் போக்கு  அதிகரித்துள்ளது. இதனால் கட்சித் தோழர்களை ஒருங்கி ணைக்க முடியாமல்,பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது என்பதையும் பெருங்கவலையோடு பகிர்கின்றனர்.  கட்சி அலுவலகத்தில் நடக்கும் ஐந்து மத்திய தர வர்க்கத்தி னரின் உரையாடல் எழுச்சியூட்டக்கூடியது. சேவியர் என்பவர் தீவிரவாதம் பேசும் கட்சியில் செயல்பட்டபோது, அங்குள்ள வேலைகள் யாவும், பூர்ஷ்வா கலாச்சாரத்தை தூக்கிப் பிடித்த தால்,அதிலிருந்து விலகி இடதுசாரி அரசியலைத் தேர்ந்தெ டுத்ததாகக் கூறுகிறார்.  பெரு விவசாய பகுதியிலிருந்து வந்த ஒருவர்,  தொழில்மயமாக்கல் விவசாயத்தை பாதித்ததென்றும், சிறு வயதிலிருந்தே அநீதிகளை எதிர்த்ததால்,இயற்கையாகவே இடதுசாரியானதாகக் கூறுகிறார்.  மற்றொருவரோ, கிறித்துவ முற்போக்கு பாதிரியாரின் வழிகாட்டல்படி, மார்க்ஸியத்தை கற்று, அலெண்டேவின் பாப்புலர் யூனிடியில் இணைந்து தற்போது கட்சியில் பணி யாற்றுவதாகவும் கூறுகிறார்.  நான்காமவரோ,தத்துவத்திற்கும் செயல்பாட்டிற்கும் இடையில், அவ்வப்போது காட்டும் எதிர்ப்பு மட்டும் செயல் களாக மாறுகிறது.மற்றவையெல்லாம் செயல்வடிவமாக மாறுவதில்லை என்கிறார்.  முடிவாக அல்போன்ஸா என்பவர், கட்சி என்பது வர்க்கங்களின் உணர்வு.தொழிலாளி வர்க்கத்தின் நேர்மைக்  கான ஒரே சான்று,அவர்கள் தங்களது கடந்த காலத்தை முழுமையாக துறந்து,கட்சியின் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட வேண்டும். வாக்குவாதத்தைவிட ஒரு ஒழுங்கான விவாதமே  தொழிலாளி வர்க்க ஒழுக்கமாகும்.தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சியும்,பரந்த முன்னணியை உருவாக்குவதின் தேவையுமே தந்திரோபாயஆதரவைப் பெற வழிவகுக்கும், எனத் தெளிவுபடுத்துகிறார்.

 தொழிற்சங்கத் தலைவர்கள்,கட்சி செயலரிடம் ஆலையை கையகப்படுத்துவதற்கான சரியான காரணத்தோடு அனுமதி கேட்கின்றனர். செயலரோ,ஆட்சியிலிருக்கும் புதிய சோசலிச அரசுக்கு இதனால் ஏற்படும் நெருக்கடியை கூறி,சரியான காரணத்தோடு அனுமதி மறுக்கிறார். ஆனால் கட்சி அனு மதியின்றி கையகப்படுத்துகின்றனர். கட்சிக்கு கட்டுப்படாத போக்கு அன்றும் இருந்துள்ளது. தொழிற்சாலையை கையகப் படுத்த திட்டமிடும்போது, மாணவர்கள் போராட்டத்தை நடத்தி, எதிரிகளின் கவனத்தை திசை திருப்பி, தொழிற்சாலைக்குள் நுழைவதென எடுக்கும் முடிவானது,இன்றைக்கும் கம்யூ னிஸ்டுகள் பயன்படுத்தும் யுக்தி.    சலிப்பை தராத அர்த்தம் பொதிந்த விவாதங்கள் படம் நெடு கிலும் வருகிறது.சிறப்பான பின்னணி இசை. அலெண்டே ஆட்சிக் கவிழ்ப்பின் ஐம்பதாம் ஆண்டான 2023ல் வெளி யான இப்படம், ஸ்பெயின் நாட்டின் சான் செபஸ்டியான் உலகத்  திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.    “இது போராட்டத்திற்கான நேரம். இதில் எவ்வித சமரசமும் இல்லை.”என்ற கோஷத்தோடும்,”அரசுடமையாக்கப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் அதன் உரிமையாள ருக்கு வழங்கவே கூடாது”என்று எழுதப்பட்ட பதாகை களோடும்தொழிலாளர்களின் எழுச்சிப் பேரணியோடு படம் துவங்குகிறது.    அலெண்டே கொல்லப்பட்டு சோசலிச அரசு வீழ்த்தப்பட்டதன் குறியீடாக,கட்சியின் மத்தியதரப் பிரிவினர் சோசலிச அரசைக் காக்க இயலாமல் தற்கொலை செய்கின்ற னர் என்ற புனைவோடுமுடித்துள்ளனர்.இறுதியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வீதியில் திரள்கின்ற காட்சி,மக்கள் எழுச்சி நிச்சயம் ஒருநாள் வென்றே தீரும்.அன்றே புரட்சியும் சாத்தியம் என்பதை உணர்த்துகிறது. கம்யூனிஸ்ட்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். முபியில் உள்ளது.