tamilnadu

img

திருவாரூர் மாவட்டத்தில் வெண்மணி நினைவுக் கொடி பயண குழுவினருக்கு எழுச்சி மிகு வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் வெண்மணி நினைவுக் கொடி  பயண குழுவினருக்கு எழுச்சி மிகு வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2-6 என, 5 நாள் நடைபெறுகிறது. மாநாட்டு கொடி மரத்தில் ஏற்றப்படும் வெண்மணி நினைவு கொடி கீழ்வேளூரில் இருந்து புறப்பட்ட, வெண்மணி தியாகிகளின் கொடி பயணம் குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம், நகரம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக திருவாரூர் மாவட்ட எல்லை ஆண்டிபாளையத்தில் இருந்து எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெண்மணி தியாக பூமியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவு கொடி பயண குழுவிற்கு தலைமை ஏற்று வருகை தந்த சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, பயணக்குழு உறுப்பினர்கள் எம். ஜெயசீலன், சாமி.நடராஜன், கே. தமிழ்செல்வி மற்றும் பயண குழுவினருக்கு ஆண்டிபாளையம் கடைவீதியில் இருந்து அதிர்வேட்டு முழுங்க, செந்தொண்டர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, திருவாரூர் புதிய ரயில்நிலையம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் அகில இந்திய 24-ஆவது மாநாட்டு வரவேற்ப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். அகில இந்திய மாநாட்டு சிறப்பம்சங்களை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் உரையாற்றினார். மத்திய குழு உறுப்பினர் உ.வாசகி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, எம். சேகர், கே.என். முருகானந்தன், பா. கோமதி மற்றும் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரைய்யா, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ் மற்றும் செந்தொண்டர் கண்வினர்கள் கே.பி. ஜோதிபாசு, ஏ.கே. வேலவன் மற்றும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, அகில இந்திய மாநாட்டு பிரச்சார பயண குழு திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் சென்றபோது, பேரளம் கடைவீதியில் நன்னிலம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினி, பேரளம் நகரச்செயலாளர் ஜி. செல்லம், குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.அன்பழகன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு அகில இந்திய 24-ஆவது மாநாட்டு விளக்க பிரச்சாரக் கூட்டம் கொல்லுமாங்குடியில் நடைபெற்றது. அகில இந்திய பிரச்சாரப் பயண வரவேற்பு குழுவினருக்கு செந்தொண்டர்  அணிவகுப்பு வரவேற்பு மிடுக்காக அளிக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது. பிரச்சாரப் பயணத்தில் பாண்டிச்சேரி சப்தார்ஹாஷ்மி கலைக் குழுவினர் புரட்சிகரமான பாடல்களை பாடிய வண்ணம் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.