இஸ்ரேலின் இனப் படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!
சிபிஎம் நடத்திய கண்டன இயக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 8 - காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்கு தலைக் கண்டித்தும், அங்கு உடனடி யாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று தாம் முழுமையாக நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப்படு கொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் புதனன்று (அக்.8) கண்டன இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., ஐயுஎம்எல் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், கொ.ம. தே.க. துணைப் பொதுச்செயலாளர் கே.நித்தியானந்தன், சிபிஐ(எம்எல்)லிபரேசன் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மனிதநேய ஜன நாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பேசினர்.
முதலமைச்சரும் திமுக தலைவ ருமான மு.க. ஸ்டாலின் பங்ககேற்று கண்டன உரையாற்றினார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலைக் கண்டித்தும் தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று அறிவிப்பை வெளியிட் டார். கண்டன இயக்கத்தில் முதலமைச் சர் மேலும் பேசியதாவது: பன்னாட்டு மனித உரிமை சட்டங்களை மீறும் இஸ்ரேல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்கு தல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டி ருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல,உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை யும், ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை களையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல் கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்தக் கண்டன கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது! எழுச்சியோடு என்று சொல்வதைவிட உணர்ச்சி யோடு இதை ஏற்பாடு செய்திருக்கிறது! இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழுவிற்கும், குறிப்பாக, மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் அவர் களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிப்பு இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல; மனிதநேய சிந்தனை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டித்துக் கொண்டிருக் கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனி தாபிமான, மனித உரிமை ஆதரவை மனப் பூர்வமாக நாம் வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது! கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்கு தல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் - 17 ஆயிரம் குழந்தைகள் - 175 பத்திரிகை யாளர்கள் - 125 ஐ.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்; 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது! 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கைது ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிர மிப்புக் கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில், பட்டினியால் வாடக் கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்த போது, 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது… காசாவில் மர ணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருட்கள் - மருந்துகள் - குழந்தை களுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர் களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல். பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இது போன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா? இந்திய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத் தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றி யத்தை ஆளக்கூடிய பாஜக அரசு வேகமாக மேற்கொள்ளவேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒன்றிய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடி யாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன் னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசா வில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபி மான உதவிகளை செய்யவும், இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள் கிறேன். உலக அமைதி ஒவ்வொருவரின் கடமை மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது. உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது! மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும்! மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது! இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது! இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு - மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவி களும், உடனடியாக முழுமையாக வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது - மனிதாபி மான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்! அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனை கள் - உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும். இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். வருகின்ற அக்டோபர் 14-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மா னம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடு களைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமை யான கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பாவி மக்கள் உயிர் இழப்பது உடனடி யாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் விருப்பத்தை கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசியுள்ளார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், இந்துசமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எம்.ராம கிருஷ்ணன் (வடசென்னை), ஆர்.வேல்முரு கன் (தென்சென்னை) ஜி. செல்வா (மத்திய சென்னை), எஸ்.கோபால் (திருவள்ளுர்), பி.எஸ்.பாரதி அண்ணா (செங்கல்பட்டு), கே. நேரு (காஞ்சிபுரம்) உள்ளிட்டு ஆயிரக்கணக் கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
