tamilnadu

img

தோழர் பூ ராமு மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை,ஜூன் 28- “தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு”  என்று முதலமைச்சர் தனது இரங்கலில் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும் நாடக, திரைப்பட கலைஞருமான வ. ராமு உடல் நடக்குறைவால் சென்னை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- வீதி நாடகக் கலைஞராக இடசாரி கருத்துக்களை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை  முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள. பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனி யிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும். தனது பயணத்தை நிறைவு செய்து கொண்ட தோழர் பூ ராமு பிரிவால் வாடும் அவரது குடும்பத்தி னர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக் கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் திரைக் கலைஞரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கி யமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அண்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;