சென்னை, நவ. 8 - தென்மேற்கு வங்கக்கட லில் அடுத்த 48 மணி நேரத் தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் - இலங்கை கடற் கரையை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதன்காரணமாக, சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மித மான மழை பெய்ய வாய்ப்புள் ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வரு கின்றது. இன்று (நவ.9) மயிலாடுதுறை, நாகப் பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.