tamilnadu

img

அமைச்சர் உதயநிதி, வைகோவுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சந்திப்பு

சென்னை,ஆக.18- பட்டியலின மக்கள் துணைத்திட்டங்கள் சட்டம் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இயற்றப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந் நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி ஒருங்கிணைப்பில் வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டது.  அந்த வரைவுச் சட்டத்தை தமிழக இளைஞர் நலன்-  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  ஆகியோரிடம் வெள்ளியன்று தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் சார்பில் சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ்,  துணைப் பொதுச் செயலாளர்கள் பி.சுகந்தி, க.சுவாமிநாதன்,  பொருளாளர் இ.மோகனா  மற்றும் முரளி ஆகியோர் வழங்கினர். அரசு அறிவித்தபடி வலுவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், அதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி ஒருங்கிணைப்பில் வரைவுச் சட்டத்தில் உள்ள அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறும், அதைத் தொடர்ந்து விதிகளை உருவாக்கப்படுவதை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.