கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடு தலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 100 ஆவது வயதை நிறைவு செய்து 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் இத்தரு ணத்தில் அவர் இன்னும் பல ஆண்டு கள் வாழ்ந்து வழிகாட்டிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வது சாதனையான ஒன்றுதான். ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை விட, அவர் தன் வாழ்நாளில் எதனை சாதித்திருக்கிறார் என்பதே முக்கியமானது. தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது கட்டுப் பாடு நிறைந்த வாழ்க்கையின் விளை வாக 100 ஆண்டுகளை கடந்துள் ளார். இவரது 100 ஆண்டு வாழ்க்கை யின் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் 100 ஆண்டு வரலாறும் சம காலத்தவை என்றால் மிகையாகாது. தனது வாழ்நாளில் 80-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கம்யூனிசக் கொள்கை களுக்காகவும், பொதுவுடமை சமூ கத்தை அமைக்கும் மகத்தான லட்சியப் பணிக்காகவும், ஏகாதி பத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பின் பெருமுதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ ஆட்சியை வீழ்த்தவும், 1990 ஆம் ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட உலகமய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்தும், வாழ்நாள் முழுவதும் உழைப்பாளி மக்கள், அடித்தட்டு பட்டியலின மக்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் கள் உரிமைப்போராட்டங்களுக்கா கவும், அவசர நிலை பிரகடனம் போன்ற அரைப் பாசிச அடக்குமுறை களை எதிர்த்தும், இந்திய நாட்டு ஒற்றுமைக்கும், இறையாண்மை க்கும் பேராபத்தாக அமைந்துள்ள மத வெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். தலைமை யிலான வலதுசாரி ஆட்சியை எதிர்த்தும், களம் பல கண்ட மகத்தான தியாக வாழ்வினை கொண்ட வர் தோழர் என்.எஸ். என்பது பெரு மைக்குரியது, பாராட்டுக்குரியது.
தகைசால் தமிழர்
தோழர் என்.எஸ். அவர்களின் மகத்தான சேவையைக் கௌ ரவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு முதன் முதலாக “தகைசால் தமிழர்” விருதினை அறிவித்தது. அந்த விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து விருதினை வழங்கி தோழர் என்.எஸ். அவர்களை கௌரவித்தார். இந்த விருதிற்கு முற்றிலும் பொருத்தமானவர் தோழர் சங்கரய்யா. அவரது வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களை படிப்பினையாக அடுத்தடுத்த தலைமுறையினர் பின் பற்ற வேண்டியது அவசியமாகும். 1922 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நரசிம்மலு, ராமானுஜம் தம்பதியரின் மகனாக அவர் பிறந்தார். விடுதலைப் போராட்ட பாரம்பரியமும், பகுத்தறிவுச் சிந்தனையும் கொண்ட குடும்பம் அது. 1937 ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியை அழைத்து கல்லூரியில் பேச வைத்தார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தி கல்விச் சட்டத்தை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டார். அக்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் மிக உக்கிர மாக நடந்து வந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சங்கரய்யா முன்னால் பட்டப்படிப்பா? ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமா? எது முக்கியம் என கேள்வியெழுந்த போது, நாட்டு விடுதலையே முக்கிய மானது என படிப்பை துறந்து மாண வராக இருக்கிற போதே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறைப்பறவை
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக புனையப்பட்ட சதி வழக்குகள், விடு தலைக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டதால் கைது, இந்திய - சீன எல்லை தாவாவின் போது கம்யூ னிஸ்டுகளின் மீது தொடுக்கப்பட்ட அவதூறு என பல்வேறு காலங்களில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் கொடுஞ்சிறையில் அடைக்கப் பட்டார். அன்றைய சிறை வாழ்க்கை கொடுமைகள் நிறைந்தது. எதற்கெடுத் தாலும் கொடும் தாக்குதல், தனிமைச் சிறை, கை-கால்களில் விலங்கு பூட்டுவது, தரமில்லாத உணவுகள் வழங்குவது, குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளுக்கும்கூட அனுமதிக்க மறுக்கும் கொடுமை நிறைந்த சிறை வாழ்க்கையை அனு பவித்தது மட்டுமின்றி, இந்த கொடு மைகளை எதிர்த்து சிறைக்குள் நடந்த எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் என்.சங்கரய்யா. தனது வாழ்நாளில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் தலைமறை வாக இருந்து இயக்கப் பணியாற்றி யவர். தலைமறைவு வாழ்க்கையில் அந்தந்த வேளைக்கு உணவு போன்ற எந்த உத்தரவாதமும் இல்லாமல் பசி, பட்டினியை தாங்கிக் கொண்டவர். தலைமறைவு காலத்தில் பல நாட்கள் நடைபயணமாகவே சென்று இயக்கப் பணியாற்றியவர்.
இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1943 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட மதுரை மாவட்ட கட்சி செயலாளராக, மாநிலக் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட வலது திருத்தல்வாதம், இடது அதிதீவிரவாத போக்கு களை எதிர்த்து கட்சிக்குள் உறுதிமிக்க போரா டடத்தை நடத்தியதில் முக்கியப் பங்கினை ஆற்றி யவர் தோழர் என்.சங்கரய்யா. 1961 ஆம் ஆண்டு கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் திருத் தல்வாதத்தை எதிர்த்து போராடி தேசியக் கவுன்சி லில் இருந்து வெளிநடப்பு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு காரணமாக 32 தேசியக் கவுன்சில் உறுப்பினர்களில் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற இரண்டு முக் கிய தலைவர்களில் தோழர் என்.எஸ். அவர்கள் ஒருவர். கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மற்றொருவர். கட்சியின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு இந்திய நாட்டிலும், தமிழகத்திலும் ஏற் படுகிற பல்வேறு அரசியல் திருப்பங்களில் மார்க்சி யத்தின் துணைகொண்டு மிகச் சரியான அரசியல் நிலைபாடுகளை அணு அளவுகூட பிறழாமல் கட்சி அணிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், பொதுக்கூட்டங்களிலும் தெளிவுபட எடுத்து விளக்குவதில் தோழர் என்.எஸ். அபாரமான திறமை கொண்டவர். அவரது கம்பீரமான குரல் வசீகரமானது. தேவையற்ற வார்த்தை அலங்கா ரங்கள் இல்லாமல், கேட்போர் உள்ளங்களில் அவ ரது உரைகள் பசுமரத்து ஆணி போல் பதிந்து விடும் அளவிற்கு உரை நிகழ்த்துவதில் வல்லவர்.
இன்றும் கேட்கும் சங்கநாதம்
தனது 100 ஆவது வயதிலும் “தோழர்களே - இன்குலாப் ஜிந்தாபாத் - மக்கள் ஜனநாயக புரட்சி ஓங்குக” என அவரது சங்கநாதம் இளம் உள்ளங்க ளில் மின்சாரம் பாய்ச்சுவதாக அமைந்திடும். அண்மையில், மதுரையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் காணொலி வடிவில் அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்து மாநாட்டை வாழ்த்திய போது, அரங்கமே அதிர்ந்தது. பதவி, கட்சிக்குள் பொறுப்பு போன்றவை களில் எந்த ஊசலாட்டங்களும் இல்லாமல் கட்சி யின் கட்டுப்பாடுகளை உறுதியாக நிறைவேற்று வதில் இன்றுவரை இரும்பு மனிதராகத் திகழ்பவர் தோழர் என்.எஸ். பல்வேறு காலங்களில் கட்சிக் குள் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதம் நடந்தாலும், இறுதியாக கட்சி மேற்கொள்ளும் நிலைபாட்டை ஏற்று உறுதியுடன் செயல்படு பவர். எந்தச் சூழ்நிலையிலும் கட்சியின் நிலைபாடு களுக்கு மாறாக ஒரு வார்த்தையைக் கூட அவர் வெளியிட்டதை பார்க்க முடியாது. 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாயமாக இந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி கைதானதன் மூலம் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. அப்போது முதல் இப்போது வரை தமிழ் மொழி மீதும், பழந்தமிழ் இலக்கியம், வரலாறு உள்ளிட்டவைகளில் தெளி வான புரிதலை கொண்டவர் தோழர் என்.எஸ். அவர்கள். 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த ஆட்சி மொழி திருத்த தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத் தங்களை முன்மொழிந்து தோழர் என். சங்கரய்யா அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுப் பேருரை யாகும். கல்வி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி அனைத்திலும் தாய்மொழியே இடம் பெற வேண்டும், தாய்மொழிக்கு மாற்றாக இன்னொரு மொழியைப் படிக்க யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை அழுத்தமாக சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். பல மொழி கொண்ட இந்திய தேசத்தில் இந்தியைத் திணிப்பது, சமஸ்கிருதமய மாக்குவதும் போன்ற நடவடிக்கைகளால் இடி யாப்பச் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிற மொழிப் பிரச்சனைக்கு தெளிவான தீர்வினை சட்டமன்றத் தில் முன்மொழிந்தவர் தோழர் என்.சங்கரய்யா.
உழவர்களின் தலைவர்
விடுதலைப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் போராடியதுடன், கிராமப்புறங்க ளில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளால் கொடூர மாகச் சுரண்டப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு வீரஞ் செறிந்த போராட்டங்களை நடத்திய வரலாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. அப்போராட்டங்க ளில் தன்னை இணைத்துக் கொண்டு சண்டமாரு தம் செய்த தோழர் என்.எஸ். பல ஆண்டு காலம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவராகப் பணியாற்றி நாடு முழுவதும் உள்ள கிராமப்புற உழைப்பாளி மக்க ளைத் திரட்டும் பணிக்கு தலைமை தாங்கினார். 1943 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக பணியைத் துவங்கி மாநிலக்குழு, மாநில செயற்குழு உறுப்பினராக, தேசியக் கவுன்சில் மற்றும் மத்தியக்குழு உறுப்பினராக, 7 ஆண்டுகள் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளராக கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி யவர் தோழர் என்.எஸ்.
சட்டமன்றத்தில் கர்ஜனை
தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டு (1967, 1977, 1980) ஆகிய காலங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தமிழக உழைப்பாளி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலியுறுத்தி யவர். தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை உரு வாக்கி பொதுவிநியோகத் திட்டத்தை செயல் படுத்துவதற்கு குரல் கொடுத்து நிறைவேற்ற வைத்தவர். பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட குடும் பத்தில் பிறந்த தோழர் என்.எஸ். கம்யூனிஸ்ட் கட்சி யின் லட்சியங்களை ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட முறையில் அந்த லட்சியங் களை தனிப்பட்ட வாழ்விலும் நிறைவேற்றியவர். நவமணி அவர்களை காதலித்து மத மறுப்புத் திரு மணத்தை செய்து கொண்டது மட்டுமின்றி தனது 80 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் ஏராளமான சாதி மறுப்பு மற்றும் சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்தவர் தோழர் என்.எஸ். தனது குடும்பத் தில் ஏராளமான சாதி - மத மறுப்பு திருமணங்களை செய்து வைத்ததன் மூலம் எல்லா சாதி, மதங்களை யும் உறுப்பினர்களாக கொண்ட இவரது குடும்பம் ஒரு பாரத விலாஸ் என்றால் மிகையாகாது. கட்சித் தோழர்கள் மீதும், அவர்களது குடும்பத்தி னர் மீதும் மிகுந்த பரிவும், பாசமும் கொண்டவர். எங்கு சென்றாலும் தோழர்களை விசாரிப்பது மட்டுமின்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களின் படிப்பு, வேலை போன்ற அனைத்தையும் பாசப் பிணைப்போடு விசாரிப்பார். கம்யூனிஸ்ட் கட்சிக் குள் குடும்பம், குடும்பமாக இணைய வேண்டும் என்று வற்புறுத்துவது மட்டுமின்றி அதற்கு முன்னு தாரணமான குடும்பத்துக்குத் தலைவராக திகழ்ப வர் தோழர் என்.எஸ். விடுதலைப் போராட்ட நாயகர் தோழர் என்.எஸ். அவர்களின் 101 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்திய விடு தலையின் 75 ஆவது ஆண்டு கொண்டாடப்படுவது பெருமைக்குரியது. இருப்பினும் 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் பயணத்தில் விடு தலைப் போராட்டத்தின் கனவுகள் நிறைவேற் றப்படவில்லை. இந்திய கோடானகோடி உழைப் பாளி மக்களின் வாழ்வு நொறுங்கிக் கிடக்கிறது.
அவரது போராட்ட வாழ்க்கை வழிகாட்டுகிறது
விடுதலைப் போராட்டத்திற்கு துரோகமி ழைத்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டம் மத்தி யிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாடா ளுமன்ற ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. அரசி யல் சட்டப்படி வழங்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் வெட்டிச் சுருக்கப்படு கின்றன. இந்திய தேசத்தின் இறையாண்மை, பன்முகத் தன்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட அடிப்படை விழுமியங்கள் கேள்விக்குறியாக்க பபட்டுள்ளன. பட்டி தொட்டிகளில் பாடுபடும் விவ சாயக் குடும்பங்கள் நிர்க்கதியாக நிறுத்தப்பட் டுள்ளன. தொழிலாளர், உழைப்பாளர்களினுடைய உரி மைகள் பறிக்கப்படுகின்றன, பட்டியலின, சிறு பான்மை மக்கள் மற்றும் பெண்கள் - குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் நவரத்தினங்களாக திகழும் பொதுத்துறை நிறு வனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன.
வேலையின்மை அதிகரித்து படித்த இளை ஞர்கள் தவித்து வருகின்றனர். நிரந்தர பணி யிடங்கள் ஒழிக்கப்பட்டு, அவுட்சோர்சிங் முறை யில் பணியமர்த்தப்படுகிறார்கள். சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நசிவடைந்துள்ளன. இதை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து அக்குடும்பங்கள் பரிதவிக்கின் றன. இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மதவெறி சக்திகளை வீழ்த்தி, மக்கள் ஒற் றுமை, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டியது முதல் பெரும் கடமை யாக உள்ளது. சங்கரய்யா போன்ற தோழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் துரோகம் செய்தவர்கள் இன்றைக்கு அதிகாரத்தைக் கைப்பற்றி அட்டூழியம் செய்யும் நிலை உள்ளது. இவர்களை எதிர்த்த போராட்டம் என்பது என்.எஸ். போன்ற தியாகிகள் நடத்திய விடுதலைப் போராட் டத்தின் தொடர்ச்சியே ஆகும். இவற்றிற்கு எதிராக உழைப்பாளி மக்களை ஒன்றுதிரட்டி சக்திமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசர அவசியமான அரசியல் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றிடவும், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்பெரும் கட்சியாக விளங்கிடவும் தோழர் என்.எஸ். அவர்களின் 101 ஆவது பிறந்த தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!