tamilnadu

மேகதாது விவகாரம்; தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு தில்லி செல்கிறது

சென்னை, ஜூன் 18- காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாட்டு பகுதியில் அணையை கட்டுவ தற்கு பசவராஜ் தலைமையிலான கர்நாடக மாநில அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொள்வதற் காக ஆய்வு செய்து வருகிறது. இதற்கி டையே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் மீது காலம் காலமாக இருக்கும் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக சட்டப்பூர்வமான பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமையன்று (ஜூன் 18) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீர் பிரச்சனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், காவிரியில் தமிழ்நாட் டின் உரிமையைத் தடுக்கவும், நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு செயல் களை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது, மேகதாது அணை கட்டும் திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாபெரும் துரோகம்

மேகதாது அணையைக் கர்நாடக  அரசு கட்டுவது என்பது, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழ் நாட்டிற்கு வரும் நீர்வரத்தைக் குறைப்ப தன் மூலமாகத் தமிழ்நாடு உழவர்க ளுக்குச் செய்யும் மாபெரும் துரோக மும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக் கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும்.எனவே, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது.

பிடிவாதப்போக்கு

மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் கர்நாடக மாநில அரசு தனது பிடிவாத மான செயல்களிலிருந்து பின்வாங்கா மல் நடந்து வருகிறது.

சட்டவிரோதம்

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணை யத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை  விவாதிக்கும் அதிகாரம் ஆணையத் துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத் தின் தலைவர் சொல்வது சட்டவிரோத மானதாகும்.

தில்லி செல்லும் தமிழக குழு

இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு தில்லி செல்வது என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு தில்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம்  கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு  தில்லி செல்லும். தில்லி சென்றுள்ள கர்நாடக முதல மைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார் கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பாஜக அரசு பணியக்கூடாது.கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும்  வகையில் பாஜக அரசின் செயல்பாடு கள் அமையும் என எதிர்பார்க்கிறேன். காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது  தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும்.காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.