சென்னை, நவ.23- கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையை படிப்படியாக செயல் படுத்திட முயற்சிகளை மேற் கொண்டு வரு கிறோம் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுகூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் யானை யோடு செல்பி எடுக்க முயன்ற போது அந்த யானை அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சிசெய்தபோது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடை பெற்றுள்ளது. வருங்காலங்களில் இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலை நடை பெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுப்போம். இப்படிப்பட்ட ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்நிகழ்வுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆழ்ந்த இரங்கலை, வருத்தத்தை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வில் உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்ச மும், மற்றொரு நபரின் குடும்பத்துக்கு ரூ.இரண்டரை லட்சமும் நிதிஉதவியாக கோயில் சார்பில் வழங்க முதல்வர் உத்த ரவிட்டுள்ளார். நானே திருச்செந்தூருக்கு சென்று நிதியுதவியினை வழங்கி முதல்வர் சார்பில் ஆறுதல் கூற இருக்கிறேன். அனைத்துக் கோயில்களிலும் உள்ள யானைகள் வனத்துறையின் அனுமதியோடு தான் பராமரித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை சரி பார்க்கச் சொல்லி இருக்கின் றோம். அப்படி அனுமதி இல்லாமல் இருக் கின்ற கோயில்களில் நிச்சயமாக வனத் துறை அமைச்சர் கூறிய அறிவுரைப்படி அந்த அனுமதி பெறுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம். கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை டிப்படி யாக செயல் படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின் படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோயில்களிலும் படிப்படியாக செயல்படுத்துவதற்கு இந்துசமய அறநிலையத்துறை முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.