தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
மதுரை, ஜன.8- மூட்டா (மதுரை காமராஜர் மனோன்மணீ யம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றம்) அமைப்பின் 50-ஆவது ஆண்டு பொன் விழா மாநாடு மதுரையில் மூட்டா தலைவர் சி. இராதா கிருஷ்ணன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் முனைவர் எஸ். ரமேஷ் ராஜ் வர வேற்றுப் பேசினார், பொருளாளர் முனைவர் ஏ.டி.செந்தாமரை கண்ணன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மூட்டா பொன்விழா மலரை மனோன்மணீ யம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் என். சந்திரசேகர் வெளியிட, மூத்த தலைவர் பேரா.கே.ராஜு பெற்றுக் கொண் டார்.
வர்ணாசிரமக் கொள்கையால் கல்விக்கு பேராபத்து
மாநாட்டை துவக்கி வைத்து பாலபிரஜா பதி அடிகளார் உரையாற்றினார். அவர் பேசு கையில், “மூட்டா இயக்கம் இடதுசாரிப் பாதை யில் பயணிக்கிறது. இதயமும் நமக்கு இடது புறம் தான் உள்ளது. பேராசிரியர்களாகிய நீங்கள் உங்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, மாணவர்களின் நலனுக்கும், சமூகத்தின் நல னுக்கும் போராடுகின்றீர்கள். தரமான உயர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். வர்ணாசிரமக் கொள்கைத் திணிப்பு கல்விக்கு பேராபத்து. ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைக்கப்பெற் றால் பொன்னையும் பொருளையும் அவரால் சேர்க்க முடியும். இந்தத் தருணத்தில் தமிழக அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் கல்வியாளர்களை அவைக்கு கொண்டுசெல்ல வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
பீட்டர் அல்போன்ஸ்
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலை வர் பீட்டர் அல்போன்ஸ், மாநாட்டில் பேசிய தாவது: டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் கல்லூரிச் செயலரின் சட்ட விரோத பண வசூலுக்கு ஒத்து ழைக்க மறுத்ததால் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகும் ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகின்றனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் கல்லூரி யிலும் விதிமீறல் உள்ளது. பாளையங் கோட்டை புனித சேவியர் கல்லூரி பிரச்சனை ஆகிய வற்றை மூட்டா மாநாடு சுட்டிக் காட்டியுள் ளது. உண்மையிலேயே இது வேதனையளிக்கி றது. விவேகானந்தர் கல்லூரியின் பழைய மாண வர் பாலபிரஜாபதி அடிகளார், பாளையங் கோட்டை சேவியர் கல்லூரியின் பழைய மாண வர் நான் (பீட்டர் அல்போன்ஸ்). மதங்களை நம்மால் ஒன்றிணைக்க முடியவில்லை. ஆனால், பேராசிரியர்களை துன்புறுத்துவதில் மதங்க ளுக்குள் வேற்றுமையில்லை என்பதை நினைக் கும் போது கவலையாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். மூட்டாவின் 50 ஆண்டுகாலத்தில் மனித மாற்றம், சமூக மாற்றம், கல்வியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாற்றம் எத்தகைய விளைவு களை ஏற்படுத்தியுள்ளதா? உயர்கல்வியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? மாற்றத்திற்கேற்ப கல்வி இருக்கிறதா? சிறு பான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதுதான் மாற்றமா? கடந்த ஆண்டு 1.75 டன் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. இந்த போதைப் பழக்கத்திலி ருந்து மாணவர்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்? வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித் துள்ளன. குறிப்பாக வெறுப்புப் பேச்சுகள் மாண வர்களிடையே கல்லூரிகளில் திணிக்கப்படு கிறது. தவறான தகவல்கள், தவறான சரித்தி ரங்களைக் கூறுவது, தவறான முன்னுதார ணங்களைக் கூறுவது இதில் அடங்கும். விஞ்ஞா னப்பூர்வ அணுகுமுறை, விஞ்ஞானப்பூர்வ பார்வை சிதைக்கப்படுகிறது. இதிலிருந்து மாண வர்களை மீட்டெடுக்க வேண்டும்.
சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் என்ற அடிப்படையில் சிறுபான்மை மாண வர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்கக்கோரி கடிதம் அனுப்பு மாறு பல சிறுபான்மை கல்லூரிகளுக்கு சொல்லி யிருந்தேன். ஆனால் இதுவரை எந்த சிறு பான்மை கல்லூரியும் அதை செய்யவில்லை. சிறுபான்மை மாணவர்களுக்கு இது போன்ற உதவிகள் கிடைப்பதன் மூலம் அவர்கள் மிகப் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார். மூட்டா மாநிலத் தலைவர் சி. ராதாகிருஷ் ணன் பேசுகையில் “ நாட்டின் சுதந்திரம், ஜனநாய கம், சமத்துவம்” என்ற மூன்று கருத்துக்களுக்கு ஊறு வராமல் கல்வியைக் காப்போம். அப்படி யொரு சூழலக்கு மாணவர்களையோ, இந்த சமூ கத்தையோ இலக்காக அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியளித்தார். பொதுச் செயலாளர் முனைவர் எம்.நாக ராஜன், சுயநிதி கல்லூரி, சுயநிதி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமி ழக அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண் டும்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் படிப்படியாக மானியங்கள் வழங்கி, மானியம் பெறும் கல்லூரிகளாக அறி விக்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி களில் நடைபெறும் அனைத்து சுயநிதிப் பாடப் பிரிவுகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இதன் மூலம் சுயநிதிப் பிரிவு வகுப்புகளை முற்றி லும் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை முன்மொழிந் தார். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டு அமைப்புச் செயலாளர் ஜெ. பெர்மின் ஆஞ்சலோ செல்வின் நன்றி கூறி னார். முன்னதாக கருப்பாயூரணி சாலையில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி சட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. தங்க மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. லெனின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மூட்டா முன்னாள் தலைவர் பேராசி ரியர் எஸ். சுப்புராஜூ சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார் .அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.