tamilnadu

img

கண்துடைப்புக்கு நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாம்!

தருமபுரி, ஜூலை 26- ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெ றும் மாற்றுத்திறனாளிகள் முகாம் வெறும் கண்துடைப்புக்கு நடைபெறுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகத்தில் மாதத்தில் இரண்டாவது வாரமும் நான்காவது வார மும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும்  முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளை மருத் துவ பரிசோதனை செய்து பின்பு தேசிய  அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அரசின் உதவித்தொகை மற்றும்  அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். குறைபாடு உடையவர்களுக்கு மருத் துவ பரிசோதனை செய்து பாதிப்புக்கு ஏற்றார்போன்று மருத்துவச்சான்றிதழ் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற தரும புரி மாவட்டம் முழுவதும் சான்றிதழ் பெற மாற்றுத்திறனாளிகள் பாதுகாவ லருடன் பேருந்து மற்றும் ஆட்டோக்க ளில் தனிவாகனத்தில் பணம் செலவு செய்து இந்த முகாமுக்கு வருகின்றனர். முகாமில் அடிப்படை வசதிகளான குடிநீர் மாற்றுத்திறனாளிகள் அமர்வ தற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. டோக்கன் பெற மணிக் கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் தமிழ் செல்வி கூறுகையில், முகாமிற்கு மாவட் டம் முழுவதும் பலநூறு ரூபாய் செலவு செய்து 21 வகையான மாற்றுத்திறனாளி கள் முகாமிற்கு வருகின்றனர். மாதத் திற்கு இருமுறை நடத்தும் இந்த முகாம் எந்த வித அடிப்படை வசதியின்றி கண்து டைப்பு முகாமாக நடத்துகின்றனர். இந்த முகாமிற்கு எலும்பு மற்றும் கண் மருத் துவர் மட்டும் வருகின்றனர். இந்த முகா மிற்கு குறைந்தது 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். எவ் வளவு மாற்றுத்திறனாளிகள் வந்தாலும் 3 மருத்துவர்கள் தான் வருவார்கள் முதலில் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கிவிடுவார்கள் காலையில் வரும்  மருத்துவர்கள் மதியம் 1 மணிக்கு சென் றுவிடுவார்கள். மருத்துவரை பார்க்க முடியாத மாற்றுத்திறனாளிகள் அடுத்த  முகாமிற்கு வரச்சொல்வார்கள். இந்த முகாமிற்கு வருவோர் டோக்கன் வாங் கவே மணிக்கணக்கில் காத்திருக்க வேண் டும். கூட்ட நெரிசலில் மாற்றுத்திறனா ளிகள் நிற்க முடியாமல் வெயிலில்  சிர மப்படுகின்றனர். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லை. மேலும், நரம்பு பாதிப்பு ஏற்பட்டு வரும் மாற்றுத்திறனா ளிகளை எலும்பு பிரிவு மருத்துவரே பரி சோதனை செய்து இது சின்ன பிரச்சனை தான் சரியாகிவிடும் என சான்றிதழ் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் நிலை  உள்ளது. உரிய நரம்பியல் மருத்துவர் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளை திருப்பி அனுப்பும் சூழல் உள்ளது. இத னால் தேவையில்லாமல் பணவிரயமும் மனவிரக்தியும் ஏற்படுகிறது. எனவே  மருத்துவ முகாமிற்க்கு அனைத்து பிரிவு  மருத்துவர்களும் பங்கேற்க வேண்டும். அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபடுவோம், என்றார்.