தங்கம் வாங்குவதற்கு சிறந்த நாள் அட் சய திருதியை என்ற ஒரு நம்பிக்கையே மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப் பட்டது தான். அதுவும் கார்ப்பரேட் நிறுவ னங்கள் நகை வியாபாரத்தில் நுழைந்த பின் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கி யாவது தங்கம் வாங்க வேண்டும். இருக்கிற தங்கத்தை அடகு வைத்தாவது நகை வாங்க வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு. உண்மையில் அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்கு மட்டுமே சிறந்த நாளா...? அட்சய திருதியை என்ற வியாபாரக் கரடி கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிரபல்யம் அடைந்து வருகிறது. இந்த நாட்டில் தான் எதற்கும் ஒரு புராணக் கதை இருக்குமே. அதுபோலவே இந்த அட்சய திருதியைக்கும் அளப்புகள் உண்டு. அதில் ஒன்று பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்ட கிரு தயுகத்தில் முதல் நாள் அட்சய திருதியை என் கிறது புராணம். அட்சயம் என்றால் அள்ள அள்ளக் குறை யாதது எனப் பொருள். மணிமேகலைக் காவி யத்தில் எடுக்க எடுக்கக் குறையாத அன்னம் வரும் பாத்திரம் என்று கூறப்படுவதில்லையா? இந்த நாளில் ஒரு குன்றிமணி அளவாவது, கடன் வாங்கியாவது தங்கம் வாங்கினால், அது வளரும் என்று கதை அளக்கிறார்கள். இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஒவ் வொரு வருடமும் இந்த நாளில் நகை வாங்கிய வர்கள் வீட்டில் எல்லாம் தங்கம் குட்டிப் போட்டுள்ளதா...? தங்கத்தை விற்பனை செய்வதற்கான வர்த்தக நாளாக கார்ப்பரேட் முதலாளிகளால் அட்சய திருதியை மாற்றப்பட்டுவிட்டது.
இந்த நாளில் செய்ய வேண்டிய அற்புத விஷயங்களை எல்லாம் மறக்கடிக்கும் வகை யில் அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங் கக்கூடிய நாள் என்ற மாயை உருவாகி யுள்ளது. தங்கம் வாங்கினால் மட்டும் தான் ஐஸ்வர்யம் பெருகும் என்பது அல்ல. அட்சய திருதியை அன்று நமக்கான பொருளை வாங்குவதை விட மற்றவர்களுக்கு உதவி செய்வது, தானம் செய்வது ஆகியவை பல மடங்கு நன்மைகளை அளிக்கும். ஒருவர் போதும் என சொல்லக்கூடிய ஒரே விஷயம், வயிறு நிறைய சாப்பிடும் போது தான். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் பலரும் உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். உங்களால் முடிந்தளவு அத்த கைய ஏழை, எளியோர், ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆடைகள் வாங் கித் தரலாம். கல்வி கற்பவர்களுக்கு புத்த கங்கள், பேனா, பென்சில்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். சிந்த னையைத் தூண்டி, யோசிக்க வைக்கக் கூடிய புத்தகங்களை நாம் நம் இளைய தலை முறையினருக்கு தானமாக வழங்கலாம். நம்மால் முடிந்தவற்றை அன்போடும் மன நிறைவோடும் மற்றவர்களுக்கு வழங்குவதே அட்சய திருதியை. இந்த உண்மையை அறிந்து தங்கம் என்ற மோகத்திலிருந்து விடுபடுவது நல்லது. அட்சய திருதியை நாள் என்பது எல்லா நாட்களைப் போல அதுவும் ஒரு நாளே! அந்த நாளில் வழக்கமாக நாம் என்னவெல் லாம் செய்யலாமோ அவையணைத்தும் செய்ய லாம் தான்.