tamilnadu

img

போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயதுச் சிறுமி வல்லுறவு!

கிருஷ்ணகிரி, ஆக. 19 - கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம்  அருகே கிங்ஸ்லி தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை  (என்.சி.சி.) முகாமின் போது 8-ஆம்  வகுப்பு மாணவி உள்பட 13 மாணவி களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 8 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். இந்தப்பள்ளியில் தேசிய மாணவர் படையின் (என்சிசி) முகாம் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் அங்குள்ள கலை யரங்கில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த 30 வயது சிவராமன் தலைமையிலான குழுவினர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது, இந்த முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு மாணவியிடம் (13 வயது) பயிற்சியாளர் சிவராமன் கடந்த 8 ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வர்  சதீஷ்குமாரிடம் புகார் தெரிவித்த போது அவர், இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அந்த மாணவிக்கு கடந்த 16 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது என்சிசி முகாமில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்ததையடுத்து தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனை த்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சி யாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து  சேலம் சரக டி.ஐ.ஜி. உமா,  கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஞாயிற்றுக் கிழமையன்று பாதிக்கப்பட்ட மாணவி யின் பெற்றோரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.  அதனடிப்படையில் குற்றவாளிக்கு உடந்தையாகவும் குற்றத்தை மூடி  மறைக்கவும் முற்பட்ட பள்ளி முதல்வ ரான திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதிஷ் குமார் (35), சமூக அறிவியல் ஆசிரிய ரான கந்திகுப்பம் இந்திரா நகரை சேர்ந்த ஜெனிபர் (35), பள்ளி தாளாள ரான சாம்சன் வெஸ்லி (52), பயிற்சி யாளர்களான காரிமங்கலம் வட்டம் கொள்ளுப்பட்டி சக்திவேல் (39), சூளகிரி வட்டம், பேரிகை அமுத கொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியை சேர்ந்த பெண் சத்யா (21), பர்கூர் சின்ன ஒரப்பம் முன்னாள் சிஆர்பிஎப் பணியாளர் சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான முகாம் பயிற்சியாளர் திம்மாபுரம், காந்தி நகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளை ஞர் பாசறை கிழக்கு மாவட்ட செயலாள ரான சிவா என்கிற சிவராமனும் அவ ருடன் இருந்த சுதாகரும் கோவையில் கைது செய்யப்பட்டனர்.  முக்கிய  குற்றவாளியான சிவ ராமன் கிருஷ்ணகிரி தர்மபுரி உட்பட பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் என்சிசி பயிற்சியாளராக முகாம்களில் கலந்து கொண்டு இதுபோல் பல மாண விகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பள்ளி மாண விகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண் டன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், மாதர் சங்க மாவட்டத் தலை வர் சரஸ்வதி, மாவட்டச் செயலாளர் ராதா ஆகியோர் கிங்ஸ்லி பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் கூறுகையில், “பாலியல் வன்கொடுமை குறித்து மாணவி புகார்  தெரிவித்த பின்னரும்  நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கும், சமூக சிந்த னையற்ற போக்கும், குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் பிற்போக்குத் தனமும், பள்ளிக்குள் இது போன்ற மோசமானவர்களை பயிற்சியாளராக அனுமதித்த செயலும் கடும் கண்டனத்துக்குரியது” என்றார். “மாணவிகளுக்கு முகாம்கள் நடக்கும் நிலையில் பள்ளி வளாகத்தில் ஏன் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வில்லை என்ற கேள்வி எழுகிறது. இதன்மூலம் குற்றச் செயல்களுக்கு பள்ளி நிர்வாகமே உடந்தையாக உள் ளது என்றே நம்ப வேண்டியுள்ளது. குற்ற வாளியான சிவராமன் பயிற்சியாளராக பணியாற்றிய முந்தைய பள்ளி களில் மாணவிகள் பலர் பாதிக்கப் பட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒருவரை காப்பாற்ற நினைக்கும் பள்ளியின் தாளாளர், முதல்வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் மீதான இக்கொடூர செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து ஆகஸ்ட் 22 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பர்கூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றும் நஞ்சுண்டன் தெரிவித்தார்.   இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமே ஒரு போலியான முகாம் என்றும், இவர்களுக்கும் என்சிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.