திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 12 வட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகின்றன. பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டமாக உள்ளதால் ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு மேலும் ஒரு மாவட்டத்தை உருவாக்க அரசு முன்வருமா? என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை யன்று (ஏப்.1) கேள்வி நேரத்தின்போது ஆரணி அதிமுக உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதேபோல் திருவிடைமருதூர் திமுக எம்எல்ஏ கோவி. செழியன், கும்ப கோணம் மாவட்டமாக உருவாக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாத தால் தனி மாவட்டமாக உருவாக்க முடியாது என்றார். கும்பகோணம், பழனி, கோவில் பட்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல மைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.