புதுதில்லி, ஜன.24- குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் எல்லைகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் புதனன்று கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வுள்ளனர். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் வெளி நாட்டு சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காத நிலை யில், 2 மாதங்களுக்கு முன்பே, தில்லி காவல்துறை, மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திஉள்ளது. வாகனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தியதோடு, சந்தேகிக்கும் படியான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்தோடு, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 200 குழுக்கள் குடியரசு தின பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக சமூக வலைதளங்களிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் பதிவுகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விமானநிலை யங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள், பயணிகள் அறை உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய்கள் கொண்டும், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டும் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்திலுள்ள விமான மற்றும் ரயில் நிலையங்களிலும் உஷார் நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் எல்லை களில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அணிவகுப்பு தூரமும், அதில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டுள்ளது. மேலும், நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில், போர்களில் பங்கேற்ற டாங்கிகள், பீரங்கிகள், 75 விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும் புதிதாக, ஆயிரம் ஆளில்லா விமானங்கள் பங்கேற்கும் விமான கண்காட்சியும் நடைபெறுகிறது.