7 லட்சம் பேர் பயணம்
சென்னை: தனியார் பேருந்துகளுக்கு நிகராக அரசு மாநில விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து வசதிகளும் தற்போது உள்ளன. மேலும் உடனுக்குடன் முன்பதிவும் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை விரும்பி பயணம் செய்கிறார்கள். 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் ஆன்லைன் முன்பதிவுத் திட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 496 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 632 பயணிகள் பய ணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்பதிவு தற்போது அதிகரித்துள்ளது.
முதலமைச்சருடன் சந்திப்பு
சென்னை: ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து உலக நாடு களுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட மக்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்பி, சென்னை திரும்பிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை புதனன்று (ஜூன் 4) சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, தனது சுற்றுப் பயணத்தில் நடந்தவை குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 8 தமிழகம் வருகிறார் அமித் ஷா?
சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8-ஆம் தேதி மதுரைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட பாஜக நிர்வாகி களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதற்றம் தேவையில்லை
சென்னை: கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவை யில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய ஒன்றிய அரசு அறி வுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள வர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
‘தக் லைப்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி!
சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது. அதன்படி ‘தக் லைப்’ படத்தின் முதல் காட்சி, வியாழக் கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும். சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
‘தமிழனாக எனது கடமை’
சென்னை: எனக்கு உறுதுணையாக நின்ற, நிற்கும் தமிழ்நாட்டுக்கு நன்றி. பேச வேண்டியது நிறைய இருக் கிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது தமிழ னாக எனது கடமை” என்று ‘தக் லைப்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் எழுந்த சர்ச்சையைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
. உணவுத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து உணவ கங்களிலும் சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது, ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத கண்ணாடி பெட்டியில் மூடி வைக்க வேண்டும், உணவு வணிக நிறுவனங்களில் பயன் படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவு பரிமாற வாழை இலை, பார்ச்மென்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு எண்ணெய்யை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவு நேரடியாக படும் வகையில் பரி மாறவோ பொட்டலமிடவோ கூடாது என்று 14 அறிவிப்பு களை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் தற்கொலை
அரக்கோணம்: ராணிப் பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த தனி யார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்து உள்ளார். இதில், ரூ. 25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் திணறிய அவர், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி யுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டையும் நகைகளை யும் அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், சித்தேரி ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
விரட்ட புதிய கருவி சென்னை:
சென்னை விமான நிலைய ஓடுதள பாதையில் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்ட, இடி ஓசை எழுப்பும் தண்டர் பூம்ஸ் என்ற 30 புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மரக்காணம் வழக்கில் காலக்கெடு
சென்னை: 2013 மரக் காணம் வன்முறையால் ஏற்பட்ட இழப்பை பாமக விடம் வசூலிப்பது தொடர் பான வழக்கில் 8 வாரங் களில் உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மரக்காணம் வன் முறையால் ஏற்பட்ட இழப்பை பாமகவிடம் வசூ லிக்க வருவாய் ஆணை யர் விசாரணை மேற் கொண்டுள்ளார்.
தவெக மனுத் தாக்கல்
சென்னை: “பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தமிழக வெற்றிக் கழக கொடிக்கும் எந்த ஒற்று மையும் இல்லை. எங்கள் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து பிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புசி ஆனந்த் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மனுசி: விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னை: இயக்கு நர் வெற்றிமாறன் தயாரித் துள்ள மனுசி திரைப்படத் தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சி கள், வசனங்கள் எவை? என்று சென்சார் போர்டு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: சென்னை யின் இரண்டாவது சர்வ தேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனு மதி பெறப்பட்டுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் எதிர்ப்பு களை மீறி, சுமார் 5,746 ஏக்கர் நிலங்களை கைய கப்படுத்தும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்ப தற்கான திட்ட அனுமதிக்கு ஒன்றிய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சக மும் ஒப்புதல் வழங்கி யுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை கள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோ சனை நடத்தினார்.