tamilnadu

கான்பூரில் மின்சார பேருந்து மோதி விபத்து 6 பேர் பலி; 12 பேர் காயம்

கான்பூர், ஜன.31-  கான்பூரில் மின்சாரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.  திங்களன்று அதிகாலை டாட் மில் அருகே வந்த மின்சார  பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி  வழியில் நின்றிருந்தவர்கள் மீது  மோதியதில் 6 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் பேருந்து ஒரு போக்குவரத்து காவல் பூத்தில் நுழைந்து அருகிலிருந்த டிரக்கில் மோதி நின்றது. உள்ளூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அவரைத் தேடும் பணி நடைபெறுவதாக கான்பூர் துணை காவல் ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார். கான்பூர் பேருந்து விபத்து செய்தியறிந்து கவலை யுற்றேன். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  விபத்தில் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று குடியரசு தலைவர் கூறியுள்ளார்.