tamilnadu

கல்குவாரியில் பாறைகள் உருண்டு 6 பேர் பலி

பெங்களூரு,மார்ச் 5- கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் தமிழ்நாடு, மற்றும் கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  கல்குவாரியில் பாறைகளில் வெடி வைத்து தகர்த்து கற்களாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. இந்நிலையில் வெள்ளியன்று கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் பணி நடைபெற்றது. அப்போது வெடிகளின்  அதிர்வால் குன்றின் மேலிருந்த பெரிய பாறை எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பாறையின் அடியில் உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர்  சிக்கியவர்களை மீட்கும்  பணியில் ஈடுபட்டனர்.  இதில் 6 பேர் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில்  மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.